சமுத்திரகனி(இயக்கம்), சசிகுமார்(தயாரிப்பு) கூட்டணியில் வெளிவந்த புதிய படைப்பு. இவர்களின் பழையை படைப்புகளை வைத்து இதுவும் ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்ற ஒரே நம்பிக்கையே இந்தக்கூட்டணியின் மேல் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது.
சமுத்திரக்கனி, சசிகுமார் போன்ற சிறந்த படைப்பாளிகள் தாங்கள் எழுதிவைத்த திரைக்கதையை முழுவதும் படித்துவிட்டுதான் படமாக்குகிறார்களா என்ற தேவையற்ற சந்தேகம் படம் முடிந்தவுடன் எழுகிறது.
80,90 களில் வெளிவந்த படங்களில் நையப்புடைக்கப்பட்ட சில டெம்ப்ளேட் கதைகள் உண்டு. வெட்டித்தனமாக திரியும் கதாநாயகன் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு ஒரேபாட்டில் பணக்காரனாக மாறுவது அதில் ஒன்று, சொத்துக்காக சொந்தபந்தங்களால் சிறுவதியதிலேயே வஞ்சிக்கப்படும் கதாநாயகன் வளர்ந்து அவர்களை சதியை முறியடிக்கும் மற்றொரு கதை. இந்த இருவேறு கதைகளை கொஞ்சம் டிங்கரிங் வொர்க் செய்து படம் பார்ப்பவர்களையும் ஒரு போராளியாக்குகிறார்கள். அந்த டிங்கரிங் வேலைக்காக அவர்கள் கையில் எடுத்திருக்கும் விஷயம், சொந்தங்களால் வேண்டாம் என துரத்தியடிக்கப்படம் மனநலம் குன்றியவர்கள் பற்றியது.
முதல் காட்சியில், ஒரு அறையில் இருந்து தன்னுடன் மற்றொருவரை கூட்டிக்கொண்டு தப்பித்துப்போகிறார் சசிகுமார். டைரக்டர் என்னமோ பெருசா சொல்லப்போராரு என்ற எதிர்பார்ப்புடன் நாமும் அமைதியாக காத்திருக்கிறோம். அங்கிருந்து தப்பித்த சசிகுமாரும் அவரது நண்பரும் சென்னைக்கு வருகிறார்கள்.
சென்னையில் கஞ்சாகருப்புவின் வீட்டில் தஞ்சம் புகும் இரண்டுபேரும் அண்டை வீட்டாருக்கு உதவிசெய்து, ஒரு பெட்ரோல் பங்கில் வேலையும் செய்கிறார்கள். இடைவேளை வரை கஞ்சா கருப்பின் சலித்துப்போன காமெடி டயலாக்களுடன் படம் நகர்கிறது. அவ்வப்போது பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் வந்து புண்சிரிப்பை வரவழைக்கிறார். இந்நிலையில் அவர்களை தேடி ஒருகும்பல் சென்னைக்கே வருகிறது. தேடிவந்த கும்பல் அவர்கள் இருவரும் பைத்தியக்காரர்கள், மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்து வந்துவிட்டார்கள் எனச்சொல்லவும் இடைவேளையும் வருகிறது.
இனியாவது படத்தைப்போடுவார்கள் என காத்திருக்கிறோம், இடைவேளை முடிந்ததும் யார் பைத்தியம், யார் நார்மல், ஏன், எதற்கு என்பதை படம் பார்க்கும் நாமே யூகித்துவிடுவதால் முதல் பாதியில் இருந்த கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யமும் இண்டாம் பாதியில் இல்லை.
அனநாதைகளாக விடப்படும் மனநலம் குன்றியவர்கள் மேல் அக்கறைப்படும் சமுத்திரக்கனி அந்த விசயத்தை இன்னும் பலமாக திரைக்கதையில் சொல்லியிருக்கலாம். ஏழாம் அறிவில் போதிதர்மனைப்போல சரக்குக்கு ஊறுகாயாகவே இதிலும் செய்திருக்கிறார்கள்.
இவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு பின்னணி இசைக்காக எந்த மெனக்கெடலும் செய்யவில்லை. நாடோடிகள் படத்தில் அடித்த அதை டராக்கை அப்படியே பொருத்தியிருக்கிறார்.
படம் முடியும்வரை பார்ப்பவர்களையும் போராளியாக மாற்றும் திரைக்கதை, படம் முடிந்தவுடன் ஏமாளியாக வெளியேற வைக்கிறது.



13 comments:
ungalukku ellam comment eluthura thaguthiye illa nu nenaikren... poi vera velai iruntha parunga...
:)
உங்களுக்கு எல்லாம் விமர்சனம் எழுதுற தகுதியே இல்லை.. போய் வேற வேலை இருந்தா பாருங்க.....
இப்புடியெல்லாம் எழுதினீங்க, அப்புறம் உங்களைப் போராளின்னு நினைச்சி ஸ்கெட்ச் போட்ருவாங்க :-) .. விகடன்ல, ரெண்டு மாசம் முன்னால, போராளி படம் பத்தி நம்ம சசிகுமார் நிறைய சொன்னாரு.. அதெல்லாம் டுபாகூர்ன்றீங்களா? என்ன தைரியம்? சீமான்.. இவரைப் புடிச்சி வெச்சிக்கங்க . ..
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருப்பீங்க போல .... அடிக்கடி எழுதுங்க தல, போராளி நானும் கொஞ்சம் எதிர் பார்த்தபடம் தான் ,anyway இங்கு வெளியாகவில்லை ,பார்க்க வாய்ப்பில்லை
முதல் போராளி...
படத்தை பார்த்துட்டு நம்மளையும் பைத்தியம் ஆக்கிருவாங்களோ, ஹி ஹி நான் அந்த படத்தை பார்க்கவில்லை இன்னும்...!
ஜீவா- விமர்சனம் எழுத தகுதி எதுக்குங்க... தமிழ் ஃபான்ட் இருந்தாபோறாதா? :)) என்ன தகுதி வேணும்னு சொல்லிருந்தா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்....அப்படியே ஏதாச்சும் வேல இருந்தா போட்டுக்கொடுங்க..:))
உங்களுக்கு பேன்ட் சர்ட் போடவே தகுதியில்ல....கோவணத்துக்கு மாறுங்க..............
இதுக்கு போயி போராளி என்று பெயர் வைத்து ஒரு மாய எதிர்பார்ப்பை தூண்டி விட்டு ..... ....இது என்னவோ அம்மண படத்துக்கு " துறவு"ன்னு பேர் வச்ச மாதிரி இருக்கு ....சசிகுமாரு பாவம் ....ஈசன் தோல்வியில் குழம்பிவிட்டாருன்னு தோணுது.....
arumaiyana padam.enna aachuu unkalukku . malai nj,us.
nice movie.. why your write such a bad review.... any way.. thanks for sharing your review...
please read my tamil kavithaigal in www.rishvan.com
போராளி பட விம்ர்சன்ம் - ம்ம்ம்ம் - நோ கமெண்ட்ஸ் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
Post a Comment