khஆண்டு இறுதியில் சந்தோஷத்தில் ஆழ்த்திய செய்தி நமது அன்பிற்குறிய அண்ணாச்சி, (ஆசிப் அண்ணாச்சி இல்லப்பா) மண்வாசனை எழுத்தாளன் பாசமிகு கும்பமுனி நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது என்பது பொருத்தமானவர்களுக்கு சேரும்போதுதான் விருது கொடுக்கும் வைபவங்களின் மேல நம்பிக்கை வருகிறது.


அண்ணாச்சி செளக்கியமாருக்கியளா...ரொம்ப சந்தோசம்...:))
====
பெண்ணியவாதிகளுக்கு ஒரு நல்ல செய்தி, நம்பமுடியாத செய்தி ஆனால் உண்மை. மத்திய கிழக்கு நாடுகளின் புகழ்பெற்ற டிராவல்ஸ் நிறுவனமான
கானு டிராவல்ஸ் (Kanoo Travels) சவுதியில் வாடிக்கையாளர் சேவை தொடங்கியுள்ளது. இதிலென்ன ஆச்சர்யம்னா கேக்கறீங்க... இந்த வாடிக்கையாளர் சேவையில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அனைவரும் பெண்கள். அட.... இது எப்போ????? ஒருவேளை சவுதி அரசாங்க அதிகாரிகளும் போனவாரம் விஜய் டிவியில் வந்த நீயா நானாவை பார்த்து மனசு மாறியிருப்பார்களோ...? என்ன எழவோ பெண்கள் முன்னேறுனா சர்தான்...
====
காங்கிரஸ் கட்சியைசேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன் மறைந்தார். தன்னோட வாரிசுகளை பிரதமராகவே ஆக்கிய காங்கிரஸ் கட்சியில் இருந்துக்கொண்டு தன்னோட மகன் முரளிதரனை ஒரு வார்டு கவுன்சிலரா கூட ஆக்காம போய் சேர்ந்துட்டாரே....காங்கிரஸ் கட்சில இப்படி ஒரு தலைவரா? இதுக்குத்தான் எங்க தமிழினத்தலைவர்கிட் அப்போவே ஐடியா கேட்டிருந்துருக்கனும்....டூ லேட்...
(முரளிதரன் எம்.பி.பதவிக்கு போட்டியிட்டு மண்ணைக்கவ்வியது வேறுவிசயம்)
====
நாத்திகர்னா என்னா அர்த்தம்? கடவுள் நம்பிக்கை இலலாதவர்கள்னுதானே அர்த்தம். அப்போ ஏன் கலைஞர் கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் வாழ்த்துச்சொல்லாம கிறிஸ்துமஸ்கும், பெருநாளுக்கும் வாழ்த்து சொல்றாரு... அப்போ ஏசுநாதரும், நபிகள் நாயகமும் இறைதூதர்கள் இல்லையா?
அப்படின்னு நான் கேட்கலை...என் நண்பன் ஒருத்தன் கேட்டான்... நான்சொன்னேன் "போங்கடா நீங்களும் ஒங்க ஜாதியும், மதமும்"
ஆனா கேள்வி லாஜீக்கலா நல்லாருந்துச்சேன்னு போட்டுட்டேன்...
====
போனவார காமெடி பீஸ் விருது நமது அண்ணன் ராகுல் காந்திக்கு செல்கிறது. அப்போ அதுக்கு முந்துன வாரம் யாருக்குப் போச்சுன்னாலும் கேட்கப்படாது. இப்போதைக்கு இவர்தான். திராவிட கட்சிகளின் மேல் தாவி தாவி சவாரி செய்யும் ஒரு கட்சி காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ்-ல் இருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார்னு சொன்னதும் மகராசன் படத்தில் கமல்-செந்தில் பேசும் வசனம்தான் ஞாபகம் வந்தது. "என்ன அவ்ளோ ஈஸீயா ஏமாத்த முடியாது".... "அப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டா ஏமாத்திடலாங்கறியா?" :)) பீஹார்ல வாங்குன அடி அதுக்குள்ள மறந்துபோச்சுன்னா இவருதான்டா அடுத்த இரும்பு மனிதரு...அங்...
====
அண்ணா நீங்க போட்டுத்தாக்குங்கோ அவாளை.... ...:))
யதா யதா ஹிதர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத......:))))))
====




