Tuesday, October 5, 2010

என்னமோ தெரியல... என்ன மாயமோ தெரில...

மறந்தும் மறக்காமல்
சில நினைவுகள்
மறந்தாலும் மறக்காத இயலாத
சில நினைவுகள்
மறந்தாலும் மீண்டும் துளிர்விடும்
சில நினைவுகள்

தேன் சேர்க்கும் தேனீக்கள்
போல நினைவுகளை
சேர்க்க நினைத்து இயலாமல்
சோர்வடைகிறேன்

வலைகட்டும் எட்டுக்கால் பூச்சியும்
பார்த்து சிரித்து
என்னைப்பார்த்துப்படி என்றதில்
மீண்டும் சோர்வடைகிறேன்


என்நினைவுகளை பிடுங்கிச்
சென்ற மறதி என்னும் பிசாசுக்கு
கொல்லி வைக்க என் நினைவுகளை
மீட்டெடுக்கு முயலும்போது
மீண்டும் சோர்வடைகிறேன்


காட்டாறில் குளிக்கும்
காகம்போல பயந்து பயந்து
வாழ்க்கை ஓடுகிறது
நினைவுகளை மீட்டெடுக்க
மீண்டும் முயல்கிறேன்


என் நினைவகளை திரும்ப
தந்துவிடு அல்லது
நீ திரும்ப வந்துவிடு

நாளை அல்லது நாளை மறுநாள்
உன் நினைவுகளை
நான் மீட்டெடுக்க
முயலும்போது
மீண்டும் சோர்வடைவேன்

அப்போது
மறக்காமல் க்ளுக்கான்-டி
கொண்டு வந்துவிடு
இயலவில்லை என்றால்
சக்கரை கம்மியா
லிப்டன் டீ-யாவது தந்துவிடு
===========

ஏய்...யாருப்பா அது என் கவுஜையெல்லாம்(போய்) சீரியஸா படிச்சது....?


22 comments:

அமைதிச்சாரல் said...

ஸ்ஸ்ஸப்பா...உங்க கவுஜையை படிச்சு சோர்வடைந்துவிட்டேன். டபுள் ஸ்ட்ராங்கா,.. ஒரு ஸ்பூன் சீனி போட்டு ஒரு டாடா லைஃப் மசாலாடீ கொடுங்க :-)))))

Phantom Mohan said...

எல்லாம் கிரகம்....விதி யார விட்டது.

அமைதிச்சாரல் said...

தம்பி.. டீ இன்னும் வரலை :-)))

இராமசாமி கண்ணண் said...

அய்யோ.. அய்யோ... அய்யோ :)

ஜீவன்பென்னி said...

koiyalaaaaaaaaaa.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

ப்ரியமுடன் வசந்த் said...

காட்டாற்றில் குளிக்கும் காகம்

:))))))

jothi said...

கவிஜையே மறந்துபோச்சு,.. அப்படின்னா இன்னாபா??

jothi said...

நல்லா அரம்பிச்சு புஸ்ஸூன்னு போய்ருச்சே,..

எம் அப்துல் காதர் said...

:-))))

அதனால் தானோ "ஜெய்லானி"யை காணவில்லை !!

Chitra said...

ஏய்...யாருப்பா அது என் கவுஜையெல்லாம்(போய்) சீரியஸா படிச்சது....?


........ இல்லீங்க..... அது நான் இல்லீங்க..... நான் சிரியஸ் ஆகத்தான் படித்தேன். :-)

நாடோடி said...

த‌லைப்பை பார்த்து ஏமாந்திட்டேன் த‌ல‌.. :)))))

எஸ்.கே said...

கடைசியிலே, இது விளம்பரத்திற்காக எழுதினதா!
ஆனாலும் உங்களுக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு! வாழ்த்துக்கள்!

கே.ஆர்.பி.செந்தில் said...

எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க...

Jaleela Kamal said...

வாங்க் என் பிளாக்குக்கு டபுள் ஸ்டாங்கா இஞ்சி டீ தரேன்,
எங்கேருந்து தான் இப்படி கவுஜ அதுவும் சீரியஸா வருதோ

ப.செல்வக்குமார் said...

///ஏய்...யாருப்பா அது என் கவுஜையெல்லாம்(போய்) சீரியஸா படிச்சது....?//

கவிதைய படிச்சா சீரியஸ் ஆகிட கூடாதுல்ல ..!!

சி.பி.செந்தில்குமார் said...

சீரியசான கவிதைனு நம்பி வந்தேன்ன்.... ம் ம் மொக்கையா,நடத்துங்க

mano said...

siment pottu tea kudiyunga srong aagiralaam......

சௌந்தர் said...

ஏய்...யாருப்பா அது என் கவுஜையெல்லாம்(போய்) சீரியஸா படிச்சது....?/////

யாரு... யாரு... அட யாருப்பா அது சொல்லுங்கள்

kavisiva said...

கவுஜைய நல்லாத்தானே ஆரம்பிச்சிருக்கீங்க. அப்புறம் என்னாச்சு?! நீங்களே போட்ட டீயை குடிச்சுட்டீங்களோ :)

மைதீன் said...

நம்பி, ஏமாந்துட்டேன். சாபமிடுகிறேன், எந்திரன் படத்தை இருமுறை பார்க்க கடவது.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவித.. கவித...

FEEDJIT Live Traffic Feed