Thursday, December 31, 2009

புத்தாண்டில் சிரிக்கலாம் வாங்க...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டின் முதல்பதிவையே முழுமொக்கையாக போடாமல் ஒரு நகைச்சுவை மொக்கையை இடுகிறேன். படித்துவிட்டு சிரிப்பு வராவிட்டாலும் சிரிக்கவும்,ஏன்னா லேபிள்ல நகைச்சுவைன்னு போட்டுருக்கேன்.



இடம்: பிரதமர் பன்மோகன் அலுவலகம், பாகிஸ்தானின் பாசிப்அலி குர்தாரி வந்திருக்கிறார்.


பன்மோகன்: வாங்க குர்தாரி எப்படி இருக்கீங்க?

குர்தாரி: நல்லாருக்கேன் ஜீ. உங்க ஆட்சி நல்லாருக்குன்னு கேள்விப்பட்டேன்.எப்படி அது?

பன்மோகன்: என்னைவச்சு காமெடி எதுவும் பண்ணலையே... இல்லைன்னா சொல்றேன்..அதுக்கு காரணம் என்னோட கேபினட்டுல இருக்குற புத்திசாலி அமைச்சர்கள்தான் .

குர்தாரி: அவங்க புத்திசாலின்னு எப்படி சொல்றீங்க?

பன்மோகன்: ரொம்ப சிம்பிள், இப்ப பாருங்க... (பன்மோகன் போனை ஸ்பிக்கரில் போட்டு கும்தா பானர்ஜீக்கு போன்போடுகிறார்,).

பன்மோகன்: கும்தா உங்ககிட்ட ஒரு கேள்விகேட்கறேன் பதில் சொல்லுங்க, உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த குழந்தை , அந்த குழந்தை உங்களுக்கு சகோதரனும் இல்லை, சகோதரியும் இல்லை, அப்ப அந்த குழந்தை யாரு? பதில் சொல்லுங்க.

கும்தா: (வெளங்கிடும்..இதெல்லாம் ஒருகேள்வி) அந்தக்குழந்தை நான் தான் ஜீ.

பன்மோகன்: ரொம்ப சரி ஓகே.வச்சிருங்க. பாரத்தீங்களா இப்படித்தான் என் கேபினட்டுல எல்லா அமைச்சர்களும் புத்திசாலிங்க...

(குர்தாரி விடைபெறுகிறார். பாகிஸ்தானுக்குப்போய் தன்னோட அமைச்சர்கள் எந்த அளவுக்கு புத்திசாலிங்கறதை பார்க்க ஒரு அமைச்சரை கூப்பிடுகிறார்).

குர்தாரி: நான் ஒரு கேள்விகேட்கறேன்...அதுக்குபதில் சொல்லுபார்க்கலாம். உங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிறந்த குழந்தை, அது உனக்கும் சகோதரனும் இல்ல, சகோதரியும் இல்ல.. அப்ப அந்த குழந்தை யாரு?

அமைச்சர்:(யோசிக்கிறார்) சார் ஒரு ரெண்டு மணிநேரம் கொடுங்க எப்படியாவது சோசிச்சு சொல்றேன்.

குர்தாரி: ரெண்டு மணிநேரம் என்ன 24 மணிநேரம் எடுத்துக்க...எனக்கு பதில்வேணும்.

(அமைச்சர் எவ்வளவோ யோசித்தும் பதில் தெரில...பல பேரிடம் கேட்டாச்சு யாருக்கும் தெரில... அமெரிக்க அதிபர் குபாமாகிட்ட கேட்டா அவரு சொல்லுவாருன்னு...குபாமாவுக்கு போன் போடுகிறார்)

அமைச்சர்: மிஸ்டர் பிரசிடென்ட், உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறந்த குழந்தை, அந்த குழந்தை உங்களுக்கு சகோதரனும் இல்ல சகோதரியும் இல்ல, அப்ப அதுயாரு?

குபாமா: கொயட் சிம்பிள், இட்ஸ் மீ.

குமைச்சர்: ரொம்ப தேங்க்ஸ் பிரசிடென்ட்(அமைச்சர் குர்தாரியிடம் வருகிறார்) சார் பதில் கிடைச்சிடுச்சு

குர்தாரி: எங்க விடையை சொல்லுபார்ப்போம்

குமைச்சர்: அந்த குழந்தை அமெரிக்க அதிபர் குபாமா தான் சார்...

குர்தாரி: முட்டாள் தப்பு, இதுகூட தெரில உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு

குமைச்சர்: அப்ப சரியான விடை என்னசார்? யார் அந்த குழந்தை?

குர்தாரி: அந்த குழந்தை இந்திய அமைச்சர் கும்தா...



டிஸ்கி: நல்ல அழகா சிரிக்கிறமாதிரி ஒரு குழந்தையோட போட்டோவைபோடறதுக்கு நெட்டுல தேடுனேன். கிடைக்கவேயில்ல அதான் வேறவழியில்லாம என்னோட சின்ன வயசுல எடுத்தபோட்டோவையேப் போட்டுட்டேன் அப்படின்னு சொன்னா நம்பவாப்போறீங்க...
இந்த உலகம் எப்பத்தான் என்னை நம்பப்போகுதோ?? இஃகி இஃகி

Wednesday, December 30, 2009

நச்சுன்னு சில மேட்டரு மச்சி 30-12-09

இந்தியாவின் ஒட்டுமொத்த மீடியாவும் இப்ப போகஸ் பண்ணியிருப்பது தெலுங்கானா மேட்டரைத்தான். நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்கிறது. ஆந்திரமாநிலத்தின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து நிற்கிறது. கூடிய சீக்கிரத்துல இந்திய வரைபடத்தில் மாற்றங்கள் வரலாம். இதுபோதாதுன்னு சிரஞ்சீவி வேற தெலுங்கானாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார். இது வன்முறைகளையும், பிரச்சனைகளையும் தவிர்ப்பதற்கு பதிலாக அதிகரிக்கத்தான் செய்யும் என்று இதுபோன்ற மக்கள் சேவையில்(?) இருக்கும் மக்கள் ஆதரவு அதிகம் உடையவர்களுக்கு ஏன் தோணமாட்டேங்குது.

அதுக்கும்மேல தெலுங்கானா சந்திரசேகராவின் மருமகன் வேற சிரஞசீவி இப்படி பிரச்சாரம் பண்ணினால் உதைவாங்குவார் என்று அப்பட்டமாக அறிக்கைவேறு விட்டிருக்கிறார். அட செப்பன்டிகளா, உங்களுக்கு பப்ளிசிட்டி வேணும்னா தூக்குபோட்டுட்டு சாகவேண்டியதுதானே...பெருசா பத்திரிக்கைல போட்டோவோட வந்தரப்போவுது. அதைவுட்டுட்டு ரசிகர்களையும், ஆதரவாளர்களையும் தூண்டிவிட்டு அவனுங்க மண்டையை உடைச்சிட்டு சாகறதை பார்த்து ரசிக்கிறதை எப்பத்தாண்டு நிறுத்தப்போறீங்க? ஏடுகுண்டலவாடா இக்கட சூடன்டி?
யாரு என்ன கத்தினாலும் நம்ம சிங்ஜீ-க்கு இப்ப ஒண்ணும் கேட்காது. சாருக்கு இன்னும் பயண களைப்பே தீரலை. ஜீ நீங்கதான் ஜீ முடிவெடுக்கனும்...மறந்துடாதீங்க...
கூடிய சீக்கிரம் சென்னைல ஆந்திரா மெஸ்க்கு பக்கத்துல தெலுங்கானா மெஸ் வர வாய்ப்புகள் அதிகம் இருக்குன்னு பட்சி சொல்லுது.



---------------------------

தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இப்போ ஏதோ ஒருவகையான வைரஸ் காய்ச்சல் பரவிட்டு வருதாம். பன்றிக்காய்ச்சலின் பீதிகுறைந்தவுடன் இப்போ இது மார்க்கெட்டுக்கு புதுசு. இன்னும் பேருவைக்கலை. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு சிக்குன்குனியாவினால் ஏற்படுவது போல மூட்டுவலி,உடல்வலி ஏற்படுகிறதாம். தேங்கியதண்ணீர் மூலம் பரவும் கொசுக்களில் இந்த வைரைஸ்காய்ச்சல் பரவுவது ஏற்படுவதாக சொல்கிறார்கள். இதுக்கும் மைனாரிட்டி திமுக.வே காரணம், கலைஞர்தான் கொசுவை வளர்த்து கோட்டையிலிருந்து நெல்லைக்கு அனுப்புறாரு போன்ற பல அறிக்கைகளை இனி ஜெயா செய்திகளில் பார்க்கலாம். ஏலே கொஞசம் சுத்தம் பத்தமா இருங்கடே மக்கா... பக்கத்து ஊருக்கு பரவாம பாத்துக்கங்க மக்கா...

---------------------------

ரமணா படத்துல அதிகாரிகளை கடத்துறது யாரு, எதுக்காக கடத்துறாங்க அப்படிங்கறதை யூகிசேது தனியா கண்டுபிடிப்பாரு. அவர் வெறும் கான்ஸ்டபிளா இருந்து பலவிசயங்களை கண்டுபிடிச்சப்புறம்தான் சிபிஐ ஆளுங்க ஆரம்பகட்டத்துக்கே வந்துருப்பாய்ங்க. அந்த மாதிரிதான் இப்ப பெனாசீர் கொலைவழக்குலையும் நடந்திருக்கு. ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. அதைதுப்பறியும் ஸ்காட்லாந்து போலீஸ் வெளிப்படையா எதையும் சொல்லன்னாலும்... அரசல் புரசல் வந்தா தகவல்னு சொல்லபடுவது என்னன்னா அந்தக்கொலைக்கு முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டது முஷ்ரப் தானாம். அடப்பாவிகளா இதைக்கண்டுபிடிக்க இந்த வருஷமாடா??!! பெனாசீரை கொன்ன அன்னைக்கே எங்கூரு முனுசாமி சொன்ன மேட்டராச்சே இது. பெனாசிருக்கு அப்புறம் சர்தாரிதான் வரப்போறாருங்கற மேட்டருல்ல மட்டும் முஷ்ரப் கால்குலேஷன் தப்பாயிடுச்சு... இல்லன்னா சர்தாரியும் டமால் ஆயிருப்பாரு... முஷ்ரப்பை புடிச்சு லாடம் கட்டுனா எல்லா உண்மையும் தெரிஞசுடப்போவுது. உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா???

--------------------------------


இன்னைக்கு காலைல ஆபிஸ்க்கு போகும்போது கூல் எப்எம் கேட்டுட்டு இருந்தேன். பண்பலை வானொலிங்கற பேருல அவனுங்க அடிக்கிற கூத்து ஒண்ணும் புதுசில்லை. இன்னைக்கு கேட்டுகிட்டு இருக்கும்போது ஒரு மானஸ்தான் போன் பண்ணினாரு, பண்ணிட்டு எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருசம் ஆச்சு. இன்னைக்கு கல்யாண நாளுசார்...என்னோடவொய்ப் பாகிஸ்தானுல இருக்காங்க அவங்களுக்கு வாழ்த்து சொல்லனும் சார் அப்படின்னாரு. நம்ம ஆர்.ஜே-வும் சரிங்க லைன் போட்டுதர்றேன் பேசுங்க ஆனா நீங்க எப்.எம்.ஆன்லைன்ல இருக்கீங்கன்னு சொல்லவேணாம்னு சொல்லிட்டு லைனைப்போட்டாரு... லைன் கிடைச்சதும் அம்மணி தூக்க கலத்துல போனைஎடுத்துச்சு... அவ்வளவுதுான் நம்ம மானஸ்தான் ஆரம்பிச்சாரு பாருங்க...ரொமான்ஸ் அட..அட.. அவரு முடிச்சதும் அம்மணி வேற அதுக்குமேல... அந்த அம்மணி உண்மையிலேயே அவன் பொன்சாதி தானான்னு டவுட்டா இருக்கு? அடங்கொன்னியா, அம்மணிக்குத்தான் தெரியாது...நீங்க பேசுற அசிங்கத்தை ஊரேகேட்குதுன்னு... உனக்குத்தான் தெரியும்ல அப்ப அடக்கி வாசிக்கலாம்ல... நம்ம ஆர்.ஜே..நிலைமைதான் தர்மசங்கடம் வேற வழியில்லாம நான் இங்கதான் இருக்கேன்னு சட்டுபுட்டுனு சொல்லவேண்டியதாப்போச்சு. சே...கருமாந்தரம் புடிச்சவிங்க. லீவைப்போட்டு ஊருக்குப் போய்தொலைங்கய்யா...

உன்குத்தமா என்குத்தமா...?

--------------------------------------

Tuesday, December 29, 2009

2009-ம், 2010-ம் பின்னே நானும்...

இன்னும் சில மணிநேரங்களே இருக்கிறது புத்தாண்டு பிறப்பதற்கு.

ஹேப்பிபிழ்ற் நியு இயழ்ள்ர்.., ஹயஅஅஅஅவ்வ்ழ்ழ் ஓகேடா...., !!@%%#$%#@@, புத்தான்ய்ட வாழ:ழத்தகழ்ள்...,ஆஆஆ ஹேஹப் குட்ரைட்னுழ்,
போனவருஷம் ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு ஊர்ல தூங்கிட்டு இருந்தவனுங்களையும், "தண்ணில" மிதந்தவர்களையும் எழுப்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னபோது அதுக்கு அவனுங்க திரும்பவாழ்த்து சொன்ன லட்சணம் தான் மேல உள்ளது. வருஷத்துக்கு ஒருதடவை இந்தமாதிரி வில்லத்தனம் பண்ணாத் தப்பு இல்லன்னு தோனுது.

ஒருவருடம் எப்படி ஓடிடுச்சு. நாமதான் அப்படியே ஒரே இடத்துல இருக்குறமோன்னு தோணுது. வருடகடைசியில் நின்றுக்கொண்டு அப்படியே அந்த வருடத்தை திரும்பிபார்த்தால், இன்னமும் ஏன்டா நீ இந்த பூமிக்கு பாரமா இருக்கேன்னு யாரோ பின்னாடி இருந்து கேட்பது மாதிரியே இருக்கு. ஒருவருஷத்துல ஒண்ணும் உருப்படியா பண்ணல, மொக்கையைத் தவிர உருப்படியா ஒருபதிவுகூட போடலை.

ஒவ்வொரு வருஷமும் முடியும்போதும் ஒரு வயசு கூடுகிறதுன்னு நினைக்கும்போது பக்குங்குது. ரெண்டுங்கிளாஸ் படிக்கும்போது எப்படா பத்தாங்கிளாஸ் படிக்கிற பையனாவோம்னு நினைக்கிறோம், பத்தாங்கிளாஸ் படிக்கும்போது எப்போடா வாலிபனவோம்னு நினைக்கிறோம், ஆனா வாலிபன் ஆனதுக்குப்புறம் அதைதாண்டி அடுத்தகட்டத்துக்கு போறதுக்கு மட்டும் மனம் விரும்பவே மாட்டேங்குது. இப்படி ரெண்டாங்கெட்ட நிலைல இருக்கும்போதுதான் வயசுஏறுறதே நினைச்சு கவலைவந்துடுது. (வாழ்க்கைத் தத்துவத்தையே பிரிஞசுமேய்சுட்டடா பிரதாப்பு).

இந்தலட்சணத்துல எரியுற நெருப்புல பெட்ரோல் ஊத்துற சங்கத்தோட தலைவன் ஒருத்தன் என்தலைல ஒரு வெள்ளைமுடியை கண்டுபிடிச்சுட்டான். இதெல்லாம் ஒரு பொழைப்பாடா டேய்? அதுக்கப்புறம் மில்லியன்கணக்கில் இருக்கும் கருப்புமுடிக்கு நடுவுல அந்த வெள்ளைமுடியை தேடிபுடிச்சு வேட்டையாடறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சு. இப்பல்லாம் அடிக்கடி கோத்ரெஜ் ஹேர்டை விளம்பரம் வேற கனவுல வர ஆரம்பிச்சுடுச்சு...அவ்வ்வ்வ்வ்.



புதுவருஷம்னாலே எல்லாருக்கும் பொதுவான ஒருவிசயம் புதுவருடத்துல கடைப்பிடிக்கவேண்டிய சில பழக்கங்கள்(NEW YEAR RESOLUTIONS). இந்தவருஷம் யார்கிட்டயும் குச்சியை திருடமாட்டேன், யாரோட சிலேட்டையும் ஒளிச்சுவைக்கமாட்டேனு அந்தந்த பருவத்துல அதுக்கு தகுந்தமாதிரி சில விசயங்களை புதுவருடத்துல செய்யனும்னு நினைச்சாலும் ஜனவரி மாசம் முடிஞசதும் எல்லாமே மறந்துவிடும்.
நான் 2010 ல் கண்டிப்பாக கடைபிடிக்கனும் நினைச்சுருக்குற விசயங்கள் ரெண்டு. ஒண்ணு உடல் ஆரோக்கியம், ரெண்டு கோபத்தை குறைக்கிறது.

உடல் ஆரோக்கியம்:
மூணுவேளை ஹோட்டல், இடைல கிடைக்கிறதெல்லாம் சவைக்கிறது. இப்படி கணக்கு வழக்கு இல்லாம தின்னுறதை மொத்தல்ல குறைக்கனும். ஆயில் இருக்கா, ஸ்பைசியா இருக்கான்னு எதைபத்தியும் கவலைப்படாம எதெல்லாம் வாய்க்கு ருசியா இருக்கோ எல்லாத்தையும் வாங்கி வயித்துகுள்ள போட்டுக்குறேன். அது என்னடான்னா நம்ம விஜயகாந்து மாதிரி பாடியை ஒரு ஷேப் இல்லாம ஆக்கிடுச்சு. புதுசா பேன்டு எடுத்தா ரெண்டுமாசத்துக்கு மேல போடமுடில. ஏதாச்சும் பண்ணி பிட்டாயிரலாம்னு ஒருபத்து நாளு ஜீம்முக்கு போனா, கை,கால் வலி தாங்கமுடியாம போங்கடா நீங்களும் உங்க ஜீம்மும்...

ரெண்டு மாசம் முன்னாடி நண்பர் ஒருத்தர் அந்த விசயத்தை சொன்னதுலேருந்து ரொம்ப பயமாருக்கு. 32 வயசு ஐ.டி. நண்பர் ஒருத்தரு ஹார்ட் அட்டாக்குல ஸ்பாட்ல அவுட்டாம். போகுற வயசா அது. என்டே குருவாயுரப்பா உனக்கு என்னை ரொம்ப புடிச்சுருக்குன்னா இப்பவே கூப்பிட்டுரு நான் ரெடி, யாருக்கும் பெருசா இழப்பு ஒண்ணும் இல்ல. இன்னும் அஞசு, பத்து வருஷம் கழிச்சு கூப்பிட்டா உன்னோட சவுகரியத்துக்கெல்லம் என்னால வரமுடியாது. அதுக்கு வேற ஆளைப்பாரு...புள்ளைக்குட்டிகாரன் உங்கூடவந்த என்னபண்ணுறது.

கோபம்:
போன ஏப்ரல் மாசம் ஒருநண்பர்கூட வாக்குவாதம் வந்து கோபத்துல அவரைசத்தம் போட்டுட்டேன். என்னைவிட மூத்தவர். அப்புறம்தான் இன்னொருத்தர் வந்து என்கிட்ட விசயத்தை சொன்னாரு. அவருக்கு ஏற்கனவே ரெண்டுவாட்டி ஹார்ட் அட்டாக் வந்தவருன்னு. நல்லவேளை அன்னைக்கு அவரும் டென்ஷனாயிருந்தாருன்னு ரத்த அழுத்தம் கூடி ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்திருந்தா... ஈஸ்வரா அந்த குற்ற உணர்ச்சில நிம்மதியா வாழமுடியும்? பாவம் அவரு புள்ளைக்குட்டிகாரர் வேற.( இப்போ அவருக்கு மூணாவதா அட்டாக்வந்து துபாயை விட்டு ஊருக்கே போய் செட்டிலாயிட்டாரு..)

அதனால இந்த ரெண்டுவிசயத்தை எப்படியாவது புதுவருசத்துல கடைப்பிடிக்கப்போறேன்.... ரைட்டு பசிக்குதே...ரெண்டு முட்டைபோன்டா சாப்பிட்டுவந்துர்றேன்...


நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Saturday, December 26, 2009

ஏலேய் மக்கா எப்ப வந்த...??!!

நாம வெளியூர்ல இருக்கும்போதுகூட பண்ணுற சில வியங்களை வெளிநாட்டுக்கு வந்துட்டு ஊருக்குப்போய் பண்ணுனா அதை என்னமோ பெரிய சீனாக்கிடுறாங்க, அதுல எத்தனை பயர் என்ஜீனை வச்சு அணைச்சாலும் அணையாத வயிற்றெரிச்சல் பார்ட்டிகளும் உண்டு. சில சமயம் ஏன்டா இங்க வந்தோன்னு கூட தோணும்.

வெளியூர்ல இருந்தபோது லீவுக்கு வீட்டுக்கு வந்துட்டா எப்பவும் பிஸீதான். சாப்புடுறது, தூங்கறது, படம் பாக்கறது. தப்பித்தவறியும் சொந்தக்காரங்க வீட்டுப்பக்கம் தலைவச்சு படுக்கறதில்ல. பத்துநாள் பட்டினிகிடந்தாலும் சொந்தகாரங்க வீட்டுல போய் சாப்பிடுற பழக்கமும் கிடையாது. ஆண்டவன் புண்ணியத்துல அந்த நிலைமை இதுவரை வரலை. தெரிஞசவங்க வீட்டுக்குப்போய் குட்டிகரணம் கூட அடிப்பேன்...ஆனா சொந்தக்காரங்க வீட்டுக்குபோய் பல்லிளிக்கிறது கூட அலர்ஜீ.



லீவுக்கு ஊருக்குபோறது சந்தோஷமான விசயமானாலும் அங்கப்போய் எல்லார் முன்னாடியும் பல்லிளிக்கவேணுமேங்கறதுதான் பெரிய சங்கடம். அப்படித்தான் போனதடவை வீட்டுல அரிப்பு தாங்க முடியாம திருவனந்தபுரத்துல இருக்குற ஒரு மாமி வீட்டுக்கு போயிருந்தேன். மோனே வா... எப்ப வந்நு... ... சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்ததும், பாசக்கார மாமியோட க்ராஸ் கொஸ்டின் ஆரம்பிச்சுது, என்னமா போட்டுவாங்குது, மெகா சீரியல் பார்த்து பார்த்து தமிழ் நாடு மட்டுமில்லாம கேரளா ஆன்டிகளும் கெட்டுப்போய்கிடக்குறாங்க.

முன்னாடி விசுபடம் பண்ணவேலையை இப்ப மெகாசீரியல் செம்மையா செய்துவருது. இந்த மெகா சீரியல் இயக்குனர்களை நாடுகடத்துனாலே தமிழ்நாட்டுல குடும்பச்சண்டை பாதி தீர்ந்துரும் நினைக்கிறேன். அதுமாதிரி கேரளத்துலயும் கொஞசபேரு இருக்காங்க. சரி மேட்டருக்கு வருவோம்... மாமி கேட்ட அத்தனை க்ராஸ் கொஸ்டினுக்கும் ஒரு காரணம் இருக்குன்னு நல்லாவே தெரியும், நான் எதிர்பார்த்த அந்த கடைசி கொஸ்டினும் வந்துச்சு... மோன் இப்ப எத்தரை சம்பளம் வாய்ங்குந்நு... அதானே அதுக்குத்தானே இத்தனை பில்டப்பு...

....... இவ்வளவு வாஙகுறேன் மாமி... அவ்வளவுதான்..மாமியோட முகம் போன போக்கை பார்க்க ஆயிரம் கண்கள் வேணும்... எனக்குப்புரிஞசுப்போச்சு.. அதோட அருமை புத்திரியும் சொப்பனசுந்தரியுமான மகள், திருவனந்தபுரம் டெக்னோ பார்க்குல வேலைபார்க்குது. அதோட சம்பளத்தைவிட நான் அதிகமா வாங்குறதுதான்னு மாமியோட முகத்தைவச்சே கண்டுபிடிச்சுட்டேன். உண்மையில் நான் வாங்ககுறதை விட டபுளாத்தான் சொன்னேன்...எப்படியும் மாமிக்கு வயிறு எரியப்போவுதுன்னு தெரியும், எரியறது கொளுந்து விட்டுத்தான் எரியட்டுமே... நல்ல சொந்தக்காரயங்கடா சாமி...

--------------------------

நான் போயிருந்தநேரம் நாடோடிகள் படம் ரிலீஸ், மினிசக்கரவத்தி தியேட்டர். முதல் நாள் ஷோவுக்கே கிளம்பியாச்சு ஒரு மாமி மகன் கூட. சரியான கூட்டம். ஒரு நூறுரூபா தாள எடுத்து ரெண்டு பாக்ஸ் வாங்கு மக்கான்னு சொன்னேன் பயபுள்ளைட்ட. என்னை ஒருமாதிரி பார்த்தான்.

டேய் என்னமோ இப்பத்தான் இந்ததியேட்டருக்கே வர்றமாதிரி, பாக்ஸ் அது இதுன்னு சீன்போடுற இங்க பாக்ஸ் கிடையாதுன்னு உனக்கு தெரியவே செய்யாதா?

சரிடே பாக்ஸ் இல்லன்னா பால்கனி எடு.. அதுக்கு ஏன் டென்ஷன் ஆவுற? ... டென்ஷன் நீதாம்ல ஆக்குற... எல்லாம் துபாய் பண்றவேலை...


அடப்பாவி ஒரு டிக்கெட் எடுக்கச்சொன்னதுக்கும் துபாய்க்கும் என்னங்கடா சம்பந்தம்...

---------------------------


எலேய் மக்கா எப்பவந்த?,

போனவாரம் வந்தண்டே...

நல்லாருக்கியா... சரி எனக்கு என்ன வாங்கிட்ட வந்த? நீதான ஆளு... வரப்போறேன்னு சொல்லவே மாட்டிய..சொன்னா துபாய்லேருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வர சொல்லிருமோன்னு நினைப்பல்லா...,

சே அப்படில்லாம் ஒண்ணும் இல்ல மக்கா,

சரி ஒரு பாட்டில் தாடே,

தீர்ந்துப்போச்சுடே, மூணுதான் வாங்கிட்டுவந்தேன்... கொடுத்துட்டேன்...

அதான் கண்டுக்காம போற... துபாய்க்கு போனதும் இப்படி ஆயிட்டியிடே..

ஆஹ... இந்தப்பயபுள்ளைக்கு நான் சரக்கு கொடுக்காதது தப்பா. இல்ல நான் துபாய்க்கு வந்தது தப்பா... நல்லாருங்கடே மக்கா...

Thursday, December 24, 2009

நச்சுன்னு சில மேட்டரு மச்சி- 24-12-09

நம்மூரு அண்ணாச்சி (அப்படின்னுதான் எல்லாரும் சொல்றாங்க, அவரு என்னவோ க்ரீன் கார்டு வாங்கிட்டு ஒபாமாவுக்கு ஓட்டைப்போட்டு நன்றியை காட்டிட்டாரு) நோபல் பரிசு பெற்ற திரு வெங்கட்ராமனை இந்திய அரசு மத்திய அரசின் ஆய்வுகூடங்களில் பணிஅமர்த்த சம்பிரதாய அழைப்பு விடுத்திருக்கிறது. இந்திய அரசின் சம்பிரதாய அழைப்பில் கிடைக்கும் பணி, தன் ஆராய்ச்சியுடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகாததால் இதற்கு மறுத்துவிட்டதாக கூறுகிறார் அண்ணாச்சி.

அப்படி போடுங்க அண்ணாச்சி உங்களுக்கு அமெரிக்கா கொடுக்காததையா நம்மாளுங்க கொடுத்துறப்போறாய்ங்க அதுவும் இவ்வளோ லேட்டா... தயவு செய்து வந்துராதீங்க சார் உங்களை வச்சு காமெடி பண்ணிறப்போறாய்ங்க...


----------------------------------

அப்படியே பக்கத்துல கேரளத்துல எட்டிப்பார்த்தா ஒரே நாத்தம்...என்னடா இப்படி நாறுதுன்னு பார்த்தா... கேரள காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ராஜ்மோகன் உன்னிதன் தனது காமுகியோடு கையும் களவுமாக போலீசில் பிடிப்பட்டிருக்கிறார். அவரைப்பாருங்க அடிச்ச மப்பும் தெளியல கொடுத்த காசுக்கு ஒண்ணும் செய்யவும் இல்ல வடைபோனாகூட பரவாயில்ல பெரிய முட்டை போன்டாவே போயிருச்சே தலைய கைவச்சுட்டு இருக்கறதை... சாரே தப்பு பண்றது தப்பு இல்லை தப்பு பண்ணும்போது மாட்டுறதுதான் தப்பு, ஆமா தெரியாமத்தான் கேட்குறேன் என்னய்யா உங்களுக்கு டேஸ்ட், இப்படி மொக்கையா இருக்கு... இனிமே இதுமாதிரி விசயத்துக்கெல்லாம் எங்கூரு முன்னாள் மினிஸ்டர் கண்ணப்பன் கி்ட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு போங்க சாரே...



-----------------------

அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சா அங்கேயே இன்னொரு கொடுமை தலைவிரிச்சு ஆடுது. கல்வில நூறு சதவீதம்னு புள்ளி விவரம் சொல்லுது, ரைட்டு ஆனா அதுக்குன்னு இப்படியா தன் தலைல தானே மண்ணை வாரிக்கொட்டிக்கிறது. கேரளத்தின் உள்துறை அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான கொடியூர் பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போலீஸ் துறையில் தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட புதியதுறையை தொடஙகி வைக்கவந்தபோது, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கேரளா போலீஸ்னு போர்டுல எழுதப்போக அதுவேறமாதிரி ஆயிடுச்சு... சாரே அதான் சொல்றது நமக்கு என்னத்தெரியுமோ அதைமட்டும்தான் செய்யனும்னு, இப்ப எங்க மதுரை தளபதி அஞசாநெஞசனை எடுத்துக்கோங்க இந்த மாதிரி ரிஸ்கே எடுக்கமாட்டாரு...ஒன்லி பேச்சுதான் பார்லிமென்ட்டைத்தவிர.... ஞான் போட்டே சாரே...



--------------------------

இங்கிலாந்து இளவரசரு வில்லியம்ஸ் ஏழைகளின் துயரை மீடியாக்கள் மூலம் மக்களுக்கு காண்பிப்பதற்காக மக்களோடு மக்களாக அவர்களுடன் ரோட்டுல கடும்குளிரிலும் தூங்கிருக்காரு. ரோட்ட சுத்தம்பண்ணுற வண்டில அடிப்பட்டு கபால மோட்சம் கிடைக்கவேண்டியது மயிரிழையில தப்பிச்சுருக்காராம். த்தோடா... இப்படியும் எசமானுங்க இருக்கத்தான் செய்யுறாங்க... இவருக்கு என்ன வந்துச்சு... ஓட்டுவேணுமா, பதவி வேணுமா, பணம் வேணுமா...? பிரிட்டிஷ் இளவசரசன்... குடியும்,குட்டியுமா அந்தப்புரத்துல இருக்க வேண்டிய மனுசன் மக்களுக்காக தெருவுல படுக்கறாருன்னு படிச்சதும் ஆடிப்போயிட்டேன்... ம்ஹும்... நம்மூர்லயும் சிலபேருக்கு திடீர்னு ஞானோதயம் வந்து ரோட்டுலயே லக்ஸரி பெட்ரூம்போட்டு உண்ணாவிரதம் எடுத்தது ஞாபகம் வந்துடுச்சு... பேசாம வெள்ளைக்காரனங்களே இங்க இருந்துருக்கலாம் இந்த கொடுமையெல்லாம் பார்க்காமலாவது இருந்துருக்கலாம்.

Wednesday, December 23, 2009

பள்ளிக்கூட கனவு - என் டெரரர்ர் கவிதை

பசிக்கும் காக்கைகள் உண்ணுவதை
ரசிக்கும் சிறுமிகள்
புசிக்கும் அணிலை
ரசிக்கும் சிறுவர்கள்
இன்று யாரும் இல்லை
சோறும் இல்லை
ஐந்தறிவுக்கு அறியாது
ஞாயிறு பள்ளிவிடுமுறையென்று...
இது எதையுமே அறியாது
பள்ளி செல்லா ஆறறிவுக்கு...



வீட்டுவேலை செய்யத் தெரியும்
வீட்டுப்பாடம் செய்து பழக்கமில்லை
டீக்கடையில் கிளாஸ் கழுவத்தெரியும்
பென்சில் முனை செதுக்கத் தெரியாது...
டேபிள் துடைக்கத் தெரியும்....
டேபிள்ஸ் தெரியாது...

பீடி சுற்றித்தான் பழக்கம்,
ஓடி விளையான்டு பழக்கமில்லை
தீப்பெட்டி செய்ய கையுறை போட்டு பழக்கம்
பள்ளி சீருடை அணிந்து பழக்கமில்லை...
கனவு மட்டும் காண சொல்கிறார்கள்
பள்ளிக்கு செல்வதையும் சேர்த்துதானோ?
---------------------------------------

தலைப்புல டெர்ர்ரர் கவிதைன்னு போட்டுருக்கே...டெரர் மட்டும்தான் இருக்கு கவிதை எங்கேன்னு மட்டும் கேட்டுராதீங்க மக்கா...அழுதுருவேன்...

புடிச்சிருந்தா ஒரு ஒட்டுப்போட்டுங்க சார் புடிக்கலைன்னாலும் போடுங்க சார் ஒண்ணும் குறைஞசுப்புடாது..காசா பணமா...

Monday, December 21, 2009

ராமராஜன் சட்டை

இப்ப பதிவுலகத்துல வேட்டைக்காரனை கலாய்க்கறேன்னு சொல்லி எங்கதலைவர் ராமராஜனை தேவையில்லாம நிறைபேரு வம்புக்கிழுக்கிறாங்க... ஆயிரம் கைகள் அழித்தாலும் எங்கள் பசுநேசனின் லிப்ஸ்டிக் மட்டும் மறையாது...சே தப்பாச் சொல்லிட்டனோ... சரி வர்ல அப்படியே வுட்ருவோம்.

சின்ன வயசுலேயே எனக்கு ராமராஜன் படம்னா ரொம்ப பிடிக்கும், அதுல அவரு சிலம்பாட்டம் போடுறது கண்கொள்ளாக்காட்சி. ஒருதடவை ஞாயிற்றுகிழமை தூர்தர்ஷன்ல எங்கஊரு பாட்டுக்காரன் படம் போடுறான்னு தெரிஞசதும் அன்னிக்கு முழுக்க எப்பன்டா சாயங்காலம் வரும்னு காத்துகிட்டிருந்தது ஞாபகம் கூட இருக்கு. அவரோட கலர் சென்ஸ் ரொம்ப நல்லா இருக்கும்... இப்ப அது டெரரா மாறிடுச்சு.



சிவப்பு கலர் சட்டை, வெள்ளைக்கலர் பேன்ட், வெள்ளைக்கலர் ஷு, ஓரம் வகுந்தெடுத்த சுருண்ட தலைமுடி, லிப்ஸ்டிக் அடிச்ச உதடு, வரைந்ததா ஒரிஜனலா என சந்கேப்படும்படியான மீசை என அவருக்கென்று ஒரு தனி ட்ரேட் மார்க் உண்டு. நதியா கொண்டை, நதியா சாரி, குஷ்பு இட்லி, கனகா ஜாக்கெட் இப்படி பொம்பளைங்களே அதிகமாக ட்ரேட் மார்க் வச்சுருந்த விசயத்துல
ரஜீனி ஸ்டைல் அப்படிங்கறதுக்கு அடுத்தப்படியா தனக்கென்று ஒரு ட்ரேட்மார்க் வச்சுருந்தது ராமராஜன்தான்.


கொஞசம் அடிக்க வர்ற மாதிரி கலர்புல்லா சட்டைப்போட்டா என்னடா ராமராஜன் சட்டை போட்டுருக்கேன்னு கேட்பாய்ங்க. என்கிட்ட ஒரு சட்டை இருந்தது. வெள்ளை கலர்ல சின்ன சின்ன கலர் கலரா வட்டங்கள் போட்ட சட்டை. ஒருதீபாவளிக்கு துணி எடுக்கபோனபோது அந்த சட்டைதான் வேணும்னு சொல்லி வாங்கனது. அந்த சட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த சட்டை நான் தீபாவளிக்கு போட்ட அன்னிக்கு நிறையபேரு என்னடா ராமராஜன் சட்டை போட்டுருக்கன்னா கேட்டது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. அவங்க என்ன கலாய்க்கறதுக்காக அப்படி சொன்னாங்கன்னு கூட எனக்கு தெரில.

அதுக்கப்புறம் கேட்கனுமா... என்னிக்காவது ஸ்கூல்ல கலர் ட்ரெஸ் போட்டுட்டு வாங்கன்னு சொன்னா அன்னிக்கு முதல்வேலையா வீட்டுக்கு வந்துட்டு அந்த சட்டை வெளிய எடுத்து அம்மாகிட்ட துவைச்சு வைக்க சொல்லுவேன்...டேய் ஒரு சட்டையை எத்தனை தடவைடா தொவைக்கிறது அத தொவைச்சுதான் வச்சிருக்குன்னு சொன்னாலும் மனசுகேட்காம அந்தசட்டை பத்திரமா உள்ள வைப்பேன். எப்பன்டா கலர் ட்ரஸ்போடுற நாள் வரும்னு ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கும், இப்படி எனக்குள்ள ஒரு பேன்டஸீஸை உருவாக்குன ஆளு நம்ம ராமராஜன்.

ராமராஜனை எனக்கு பிடிக்க இன்னொரு காரணம் என்னோட அத்தையோட மகள். நான் ஸ்கூல் படிக்கும்போது காலேஜ் படிச்சிட்டு இருந்துச்சு. அந்த வயசு நிறைய பொண்ணுங்ககிட்ட அந்த டைம்ல அமீர்கான்,கமல் இந்த மாதிரி ஸ்மார்ட் பாய்ஸ் கிரேஸ் இருந்தது. ஆனா அந்த டைம்லேயே ராமராஜனை ரொம்ப ரசிச்ச பொண்ணுண்ணா என்னோட அத்தை மகள்தான். என்ன ஒரு ரசனை?

அவங்க ஊருக்கு வரும்போது ஏதாச்சும் ராமராஜன் படம் ஓடிச்சுன்னா அந்தப்படத்தை பார்க்காம ஊருக்கு திரும்பி போனதா சரித்திரமே கிடையாது. ஏன்னா அவங்க ஊரான திருச்செந்தூர்ல மொத்தமே இருந்த ரெண்டு தியேட்டர்ல இந்த வருஷ தீபாவளிக்கு வந்த படம் அங்க வரும்போது அடுத்த தீபாவளியே வந்துடும். அவங்க கூட நானும் ராமராஜன் படம்பார்த்து பார்த்து அப்ப தீவிரமான ராமராஜன் ரசிகனா இருந்தேன். இப்பகூட அவங்க என்னை ஏதாச்சும் கிண்டல் பண்ணா "ஆமா நீ ராமராஜனை லவ் பண்ணவதானே..." அப்படின்னா பார்ட்டி கப்சிப். அதுல ஒரு அதிசயமான கோ இன்சிடென்ஸ் பாருங்க திருச்செந்தூர் தொகுதிலதான் ராமராஜன் தேர்தல்ல நின்னு எம்.பி.ஆனாரு. அப்ப திருச்செந்தூர் மக்கள் எல்லாருக்குமே ரசனை ஒரேமாதிரிதான் போலருக்கு.

எனக்கு ராமராஜன் நடிச்ச படத்துலேயே பிடிச்ச காட்சி கரகாட்டகாரன் படத்துல வர்ற ஒரு காட்சி. ராமராஜன் கனகாவோட வீட்டுக்கு வந்துட்டு கனகா அப்பா சண்முகசுந்தரத்தோட பேசிட்டு கிளம்பும்போது கனகாவைப்பார்த்து ஒரு லுக்விட்டுட்டு போட்டுமா அப்படின்னு தலையை ஆட்டுவாரு...சே... சூப்பர் ரொமான்ஸ். ராமராஜன் கெளதமி ஜோடி ஒருடைம்ல சக்கைபோடு போட்டுட்டு இருந்துச்சு. கமல், ரஜீனியை விட ராமராஜனுடன் அதிகம் வெற்றிப்படங்களை கொடுத்தவர் கெளதமி.



அநியாயத்துக்கு நல்லவனா வருவாரு. எம்ஜீஆரை அவர் இமிடேட் பண்ணாலும் அதையும் மக்கள் ரசித்தார்களே தவிர யாரும் குறைசொல்லவில்லை. இப்படி பல குவாலிட்டிகளை தன்னுள்ளே வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த எங்கள் மக்கள் நாயகனை தனக்கென்று ஒரு பாணி இல்லாமல் ரஜீனிகாந்தை காப்பி பேஸ்ட் பண்ணுற மொக்கை நடிகர்களுடன் ஒப்பிட்டு மக்கள் நாயகனை இழிவுபடுத்துவதை மக்கள் நாயகன் ரசிகர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

என்னச்சொல்லி என்ன பிரயோஜனம் நளினிக்கே புடிக்கலை... நம்ம ரசிர்களுக்கா புடிக்கப்போவுது, அவர் தலையெழுத்து அப்படி.

செண்பகமே...செண்பகமே...

Saturday, December 19, 2009

லண்டன் ட்ரீம்ஸ்- விமர்சனம்

இந்தப்படத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு. வேட்டைக்காரன் படம்தான் பிளாப்பு... அப்புறம் எதுக்கு அதைப்போட்டு திரும்பவும் எழுதனும், படிக்கனும்னு ஒரு சேன்சுக்கு இந்தப்படத்துக்கு விமர்சனம் போடலாம்னு தோனுச்சு. இனியும் வேட்டைக்காரன் விமர்சனம் படிச்சா உலகத்துலயே ரொம்ப பொறுமைசாலி நானாத்தான் இருக்கமுடியும்..முடில...

இந்தப்படத்துக்கும் வேட்டைக்காரனுக்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்கு.. ரெண்டுமே மொக்கை. மொக்கை எடுக்கறதுலயும் ரெண்டு வகை இருக்கு. மொக்கை நடிகர்களை வச்சு மொக்கை படம் எடுப்பது, பெரிய நடிகர்களை வச்சு மொக்கை படம் எடுப்பது. வேட்டைக்காரன் முதல்ரகம். லண்டன் ட்ரீம்ஸ் இரண்டாவது ரகம். என்னடா அப்ப விஜய் பெரிய நடிகர் இல்லயா? அப்படின்னு கேட்டா அவரை நாங்கல்லாம் நடிகர் கூட்டத்துல இன்னும் சேர்க்கலை அதுல பெரிய நடிகர் வேறயா??? த்தோடா...

இந்திப்படம் விமர்சனம் போடறதுல ஒரு அட்வான்டேஜ் என்னன்னா... தைரியமா போடலாம் நல்லப்படத்தையும் கூட மொக்கைன்னு சொல்லலாம்... ஏன்னா கான், கபூர் ரசிகர்கள் ரொம்ப கம்மி... வூட்டுக்கு ஆட்டோல்லாம் வராதுன்னு தெரியும். தமிழ்படத்துக்கு விமர்சனம் போடும்போது அது மொக்கைன்னு சொல்றதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கவேண்டியிருக்கு.



லண்டன் ட்ரீம்ஸ்

வகுப்பில் பெருசா வளர்ந்ததும் என்னவா வருவே என்று கேட்கும் ஆசிரியரிடம் மைக்கேல் ஜாக்சன் மாதிரி வருவேன் என்று சொல்லும் அளவுக்கு இசையில் ஆசைகொண்ட சிறுவன் அர்ஜுன்(அஜய் தேவ்கான்). கடுமையான போராட்டங்களுக்கு நடுவில் லண்டனில் பெரிய மியுசிக் ட்ருப் வைத்து வெற்றியடைகிறார். அவர் வாழ்க்கையில் நண்பன் சல்மான்கான் வடிவில் வருகிறது பிரச்சனை. அஜய்தேவ்கான் சல்மான் கானை தன் ட்ருப்பில் பாடவைக்க, அஜய்தேவ்கானை விட சல்மான்கானுக்கு அதிக ரசிகர்கள் கிடைக்கிறார்கள். அஜய் தேவ்கான் ஒருதலையாக காதலிக்கும் காதலியையும்(அசின்) சல்மான்மான் கரெக்ட் பண்ண பொறாமையின் உச்சத்திற்கு சென்று செய்யக்கூடாத சில விசயங்களை செய்த கடைசியில் சமாதானம் அடைந்து இரு நண்பர்களும் ஒன்று சேர்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திருந்தே லாஜீக் சொதப்பல்கள். ஏதோ ஸ்டேஜ் டிராமா மாதிரி செல்லும் திரைக்கதை என டோட்டல் சொதப்பல். பேசி பேசியே கொல்கிறார்கள்.

அஜய் தேவ்கானின் அப்பா இறந்த பிறகு ஓம்புரி அவரை லண்டனில் உள்ள தனது ரெஸ்டாரன்டுக்கு கூட்டிச்செல்கிறார் ஏதோ கொட்டாம்பட்டியிலிருந்து கூடுவாஞசேரிக்கு கூட்டிட்டுப்போவதுபோல. அதைவிட காமெடி லண்டனுக்கு சென்ற சிறுவன் அஜய்தேவ்கான் ஒம்பூரியிடமிருந்து தப்பித்து சென்று ப்ளுட் வாசித்து பிச்சை எடுத்து, நம்மூருல பிச்சை எடுத்துட்டு தியேட்டர் கவுன்டருல சில்லறையா கொடுத்து டிக்கெட் வாங்குற பிச்சைக்காரர்கள் மாதிரி இவரும் சில்லறையா கொண்டு கொட்டி லண்டன்ல பெரிய மியூசிக் காலேஜ்ல அட்மிஷன் வாங்கிறாரு.கேட்குறவன் கேனப்பயலா இருந்தா மதுரை கலெக்டர் ஓபாமா ன்னு கூட சொல்லுவாய்ங்க.

அஜய் தேவ்கான் ... இவரு ஒருத்தர்தான் படத்துல உருப்படியா நடிச்சிருக்காரு.

அரைலூசு சல்மான்கான் இதிலும் அதே அரைலூசுதான். ஸ்கிரின்குள்ளே என்டர் ஆகும்போதே எப்படா இவரு போவாருன்னு தோனுற அளவுக்கு காமெடிங்கற பேருல கடுப்பேத்துறாரு. நல்லவேளை பாடியை காட்டுற சீன்மட்டும் இல்ல.

நம்ம சேச்சி அசின்: செளத் இன்டியன் பேமிலு பொண்ணுண்ணு காட்டுறதுக்காக அவரைப்போட்டாய்ங்களா இல்ல இந்தம்மாவுக்கு இவ்வளவு போதும்னு நினைச்சாட்டங்களான்னு தெரில. ஏதோ வருது, ஏதோ புலம்புது, தானா சிரிக்குது, டான்ஸ் ஆடுது, அதோட படமும் முடிஞசுடுது. பம்பாய்வாலாக்கள் அவரைவெச்சு காமெடி பண்றாங்கனு கூட அவருக்கு இன்னும் புரியாததுதான் சோகம். யக்கா...சேச்சி நீ இங்க திரும்ப வந்துரு. இருக்கறதுக்கு ஆசைப்பட்டு...அப்படிங்கற பழமொழி மாதிரி ஆயிடப்போவுது. அங்க ஒரு ஸ்ரீதேவிதான் இருக்கமுடியும்.

ஆ...ஊ ன்னா பாட்டு போட்டுறாய்ங்க... லண்டன்ல இருக்குற மியுசிக் ட்ருப்புங்கறதனால பாட்டு ஒண்ணும் எவனுக்கும் புரியக்கூடாதுன்னு ஒரே முடிவோடதான் இசையமைச்சிருக்கிறார்கள்.
சங்கர்- இஷான்,மற்றும் லாய். தில் சாத்தா ஹை-படத்தில் கலக்கியிருப்பவர்களுக்கு இதில் என்னாச்சுன்னு தெரில.

ஒளிப்பதிவு: லண்டன் அப்படிங்கிற இடத்தை நம்மூருல கல்யாணத்துக்கு வீடியோ புடிக்கிறவருக்கு லைட்டுபுடிக்கிறவன் கையில கேமராவைகொடுத்து எடுடான்னு சொன்னாக்கூட அழகாத்தான் வரும் அப்படி ஒரு இடம். இதுல ஒளிப்பதிவு ஜுப்பருன்னு சொல்லுற அளவுக்கு காட்சிகள் கூட இல்லை.அதிகம் ஸ்டேஜ், வீடு என்று எடுக்கப்பட்டிருந்தாலும். கிடைக்கும் சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தியிருக்கலாம். ஆரம்பத்தில் வரும் பஞசாப் ஊர் காட்சிகள் ஒகே.

இந்தப்படத்தை இயக்கிய விபுல் ஷாவிற்கு இது நான்காவதுப்படம் இவரது ஆக்கேன் படம் பார்த்திருக்கேன். நல்லாவே இருக்கும்..நல்ல விறுவிறுப்பு. இப்படி ஒருமொக்கை கொடுக்கனும்னு ஏன் தோணுச்சோ... நம்மூரு பாசில் மாதிரி அங்கேயும் நிறைய சித்தப்புக்கள் இருக்கத்தான் செய்யுறாங்க... நல்லாருங்கடே...

லண்டன் ட்ரீம்ஸ் - பிளாக் அன்ட் ஒயிட் ட்ரீம்ஸ்...

Wednesday, December 16, 2009

நான் நடித்த சினிமா - அனுபவம்

கடந்த ஜுன் மாதம் ஊரிலிருந்து போது அண்ணன் மொபைலுக்கு அவரின் நண்பரிடமிருந்து போன் வந்தது, அண்ணன் வீட்டுல இல்ல என்ன விசயம்னு கேட்டா, அவரோட கடைல சினிமா ஷுட்டிங்காம், அண்ணன் ப்ரீயா இருந்தா வரச்சொல்லுன்னாரு, அண்ணன் வீட்டுல இல்ல நான் வரேன்னதும் சரிவான்னாரு. சும்மா வேடிக்கைப்பார்க்கத்தான்.

அண்ணனின் நண்பர் மீனாட்சிபுரம் மார்க்கெட்டுல பெரிய ஜவுளிகடை ஓனர். என்னபடம் யாரு என்னன்னு கூட கேட்கலை இதோ வந்துட்டேன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டு உடனே ஷேவ் பண்ணேன், குளிச்சேன், ட்ரஸ் அயர்ன் பண்ணேன், பேர்அன்ட் லல்லி போட்டேன்,முகத்துக்கு சுண்ணாம்பு அடிச்சேன், நாத்த மருந்து அடிச்சேன் கிளம்பிட்டேன். போறபோக்குல எங்ககூடவே சுத்துற பாசக்காரபய நண்பன் அராபத்தையும் கூட்டிக்கிட்டேன்.

விஜய்,தனுஷ் அந்த இத்துப்போன பர்சானலிட்டிக்கே நயன்தாராவை டாவடிக்கும்போது
(பிரபுதேவா வாழ்க) நம்ம பர்சனாலிட்டிக்கு என்ன குறைச்சல்...
நம்ம பெர்சானலிட்டியைப்பார்த்து ஒரு அமெரிக்கா மாப்பிள்ளை ரோலாவது கிடைக்காதா அப்படியே பில்டப் பண்ணி ஹீரோ, மினிஸ்டர், முதல்வர் ரேன்சுக்கு யோசிச்சுகிட்டே ஸ்பாட்டுக்குப்போனா கடைக்கு முன்னாடி ஒரே கூட்டம்.



அட தள்ளுங்கப்பா தள்ளுங்கப்பா கூட்டத்தை விலக்கிட்டு கடைக்குள்ள போனேன். ஒரு நாள் இந்த கூட்டம் எனக்காக வரப்போதுன்னு ஒரு கனவுவேற இடை இடைல பிளாஷ் ஆயிட்டு இருந்துச்சு. யாரு டைரக்டரு,என்னப்படம், யாரு ஹீரோன்னு கேட்காம முதல்ல யாரு ஹீரோயி்ன்னு தேடுனா ரெண்டு மொக்கை பிகருங்க ஒரு ஓரத்துல நின்னுட்டு இருந்துச்சு.

என்னடா சினிமா ஷூட்டிங்குன்னு சொன்னாரு இதென்னடான்னா ஏதோ மெகாசீரியல்ல
"காரு பிரேக்கை பிடிங்கி விடுறேன்டி"... "சோத்துல விஷத்தை வைக்கிறேன்டினு" கொலைவேறியோட வசனம் பேசுற சீரியல் நடிகைகள் மாதிரி இருந்துச்சு. அண்ணனின் நண்பருக்கு ஒரு வணக்கத்தைப்போட்டுட்டு என்னப் படம்னு கேட்டேன், அவர் சொன்னாரு(தவிர்க்க முடியாத காரணத்தால் படத்தின் பெயரை இங்கு சொல்லமுடியாது).

அப்ப அங்க ரொம்ப பில்டப் கொடுத்துட்டு இருந்த ஒருத்தரு கடைஓனர்கிட்ட அடிக்கடி பேசிட்டு இருந்தாரு, அவரு உதவி இயக்குனராம். அப்ப இயக்குனரை எங்கேன்னு கேட்டா அவரு வேற ஸ்பாட்டுல லொக்கேஷன் ரெடிபண்ணிட்டு இருக்காருன்னாரு. இங்க ஒரு சின்ன சீன்தான்(அந்த சீன் இல்லப்பா) எடுக்கப்போறதாச்சொன்னாரு. சே வடைபோச்சேன்னு வேடிக்கை மட்டும் பார்த்தேன்.

அன்னைக்கு எடுத்த காட்சி இதுதான். அந்த ரெண்டு பொண்ணுங்களும் துணி எடுத்துட்டு கடைக்கு வெளியே போகும்போது வெளியே நாலைந்து ரவுடிங்க அந்தப்பொண்ணுங்க கிட்ட ரவுடித்தனம் பண்ணுறாங்க, அந்தப்பொண்ணு ஓடுறாங்க, ஒட ஒண்ணும் இல்ல...ஒடறமாதிரி காண்பிச்சுட்டு கட்... இந்த காட்சியை மட்டும் 5 தடவை எடுத்துட்டு 6வது டேக்குலதான் ஒகே ஆச்சு... எனக்கு என்னமோ எல்லா டேக்கும் ஒரேமாதிரிதான் இருந்துச்சு. எதுக்கு 6 டேக்கு எடுத்துதாங்கன்னுதான் புரியல.. ஆனா அந்தப்படத்துக்கு அதுவும் அந்தக்காட்சி இத்தனை டேக்கு ரொம்ப ஓவர்.



ங்கொன்னையா... இதுல நீ எங்கடா மேகராக்குள்ள வந்தன்ன கேட்பது புரியுது. அவசரப்படக்கூடாது. ஷுட்டிங் இன்னும் முடியல... யூனிட், அவிங்களுக்குள்ளே ஏதோ பேசிட்டு இருந்தாங்க. உதவி இயக்குனர் அண்ணனின் நண்பருகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு போன உடனே அவர்கிட்ட எண்ணன்னே இவ்வளவுதானா ஷுட்டிங் முடிஞசான்னு கேட்டா கடைக்கு பக்கத்துல இருக்குற பஸ்டாண்டுல ஒரு ஷாட் எடுக்குறாங்கன்னாரு. உடனே அங்கேயும் அட்டடன்ஸ் போட்டேன்.

அந்த சீன் துணி எடுக்க வந்த ரெண்டு பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணு ஒரு பையன்கூட ரோட்டுல வச்சு பேசற மாதிரி சீன். அந்த ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது ரோட்டுல அங்கேயும் இங்கேயும் பாதசாரிகள் நடக்கறதுக்கு சிலபேரை எற்பாடு பண்ணி வச்சிருந்தாங்க... அவுங்களை செட்டப்பண்ணிட்டு இருந்தாரு அந்த உதவி இயக்குனரு.

அப்பத்தான் அவருக்கு கண்ணுல பட்டது நானும், அராபத்தும்... கடைல வச்சு என்னை பார்த்ததுனால சட்டுனு அடையாளம் கண்டுட்டு சார் கொஞசம் நீங்களும் நடக்கிறீங்களான்னு கேட்டாரு. அடப்பாவி நடிக்கிறிங்களான்னு கேட்டுருந்தாக்கூட சந்தோஷமா போயிருப்பேன்...நடக்குறிங்களான்னு கேட்டான். கடைசில நம்மளை கூட்டத்தோடு கூட்டமா நடக்க வச்சுருவாம்போல... சரி... கெளரவமா, காமெராவா பார்த்தா காமெராதான் ஜெயிச்சுது. நானும் அராபத்தும் லெப்ட், ரைட்டுன்னு நடந்தோம். நல்லவேளை ரெண்டாவது டேக்குலேயே ஒக்கே ஆயிடுச்சு. ஆமா அது என்ன உலகப்படமா... இதே ரொம்ப ஓவரு.

டேக் ஒகே ஆனதும் அராபத்து கேட்டான் "ஏன்டா ஜூனியர் ஆர்டிஸ்ட்க்கு குவார்டரும், பிரியாணிபொட்டலுமும் வாங்கித்தருவாங்களடான்னு"... அதெல்லம் ஜுனியர் ஆர்டிஸ்ட்டுத்தான்டா நம்மள மாதிரி ஆளுகிடைக்காம கூட்டத்தோட கோவிந்தா போட்டா தரமாட்டங்கடா நமக்கெல்லாம் கேமராவுக்கு முன்னாடி நின்னதே பெரிய விசயம், சரி ரொம்ப நாக்கை தொங்கபோடத வா உனக்கு ஆசாத் ஹோட்டல்ல பிரியாணி ட்ரிட் வைக்கிறேனு சொல்லி அவனை தள்ளிட்டு போனேன்....நான் செய்த பாவத்துக்கு நான்தானே பரிகாரம் தேடனும்.

அப்பவும் நான் தன்னம்பிக்கை தளரவில்லை. இந்தப்படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் அதிகமா பேசப்படற காட்சியே நான் நடந்த அந்தகாட்சியாத்தான் இருக்கும், "யாரு அங்க நடந்துபோறது முகத்துல ஒரு பிளாஷ் தெரியுது, அந்தபையனை கூப்பிட்டுவாங்கனு"... மணிரத்னமும், ராம்கோபால்வர்மாவும் எங்கவீட்டுக்கு ஆள் அனுப்புற நாள் வெகுதொலைவில் இல்லை அப்படின்னு நம்பிட்டு இருந்தவனுக்கு ரெண்டு மாசம் முன்னாடி அந்த அசிர்ச்சி செய்தி கிடைத்தது. அந்தப்படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்களாம். கண்டிப்பா இது விக்ரம், சூர்யா, அபிஷேக் பச்சனின் நலவிரும்பிகள் பண்ண சதியாகத்தான் இருக்கும். எனக்கும் காலம் வரும்.

டிஸ்கி: அந்தப்படம் எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு வீரனின் உண்மைக்கதையை படமாக எடுத்தார்கள். அந்தபடத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் இன்னும் உயிரோடு இருப்பதால் அந்தப்படத்திற்கு வந்த பலத்த எதிர்ப்பு காரணமாக படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. படத்தில் இயக்குனரிலிருந்து நான் வரை எல்லாமே புதுமுகங்கள். படத்தின் பெயர் வேண்டாமே...

Monday, December 14, 2009

நான் ரசிக்கும் ஒரு பாடல் - பாடல் விமர்சனம்

உறங்கும் முன் பாட்டுகேட்டு மூளைக்குப்பழகிப்போச்சு. பாட்டுகேட்கலைன்னா தூக்கமே வராது.(மூளை இருக்குன்னு எப்படில்லாம் நிரூபிக்க வேண்டியிருக்கு). அதிகம் கேட்பது மெல்லிசை மன்னர் மற்றும் ராசய்யாவை. சிலதனிமை தருணங்களில் கூட அதிகம் கூட இருப்பது இவர்கள்தான்.

மெல்லிசை மன்னர் பாடல்களில் அதிகம் கேட்பது பிபிஎஸ் பாடிய பாடல்கள். அவரது நிறைய கலக்ஷன் வைத்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பாடகர். வித்தியாசமான குரல், பிடித்த நடிகர் ஜெமினிக்கு அதிகம் குரல் கொடுத்தவர், குரலில் ஒரு குழைவு இருக்கும். இவரிடம் ஒரே பிரச்சனை "ர","ற" என்ற எழுத்து."பத(ற)வைகளில் அவள் மணிபுதா(றா)" என்று பாடுவதுகூட கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கும். அவரை கிண்டல் பண்ணுவதற்காக சொன்னதல்ல. இவர் குரலை ரசிப்பவர்கள் அறிந்த விசயம்தான். டி.எம்.எஸ். பாடல்களை அதிகம் கேட்பதில்லை.வைத்துக்கொள்ளவும் இல்லை. அவரது கணீர் குரல் வரும் தூக்கத்தையும் கெடுத்துரும்.

இவர் பாடிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் பாவ மன்னிப்பு படத்தில் வரும்
"காலங்களில் அவள் வசந்தம்" ஒரு பெண்ணின் அழகையும், குணத்தையும் வர்ணிப்பதாக வரும் கவியரசர் கண்ணதாசனால் எழுதப்பட்டப்பட்ட பாடல். இந்தப்பாடலில் முதல் வரிகளில் ல,ள,ழ போன்ற எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் தொடர்ச்சியாக வரும், பிபிஎஸ் சும்மா பிச்சு உதறியிருப்பார்.



இதுபோன்ற பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள் இடைப்பட்ட கால படங்களிலும், தற்காலப் படங்களில் கூட நிறைய வந்திருக்கிறது. ஆனால் இந்த அளவுக்கு அத்தனை நாகரிகமாக, அழகாக, எவருக்கும் புரியும்படியான வரிகளை கொண்ட பாடல்கள் எதுவும் வந்ததகாக தெரியவில்லை. இப்போதைய காலகட்டத்திற்கே எழுதப்பட்டிருக்கிறது என்று நியாயப்படுத்தினாலும், அவற்றை ரசிக்கமுடியாதென்கின்றபோதே அப்பாடல் தோல்வி அடைந்துவிட்டதற்கு சமம். 30 வருடங்களுக்கு மேலாகியும் பிபிஎஸ் பாடல் இன்றும் பலபேரால் ரசிக்கப்படுவதே அந்தபாடலுக்கு வெற்றி.

டி.ஆர் கூட தனது ரயில் பயணங்களில் படத்தில் வரும் "வசந்த காலங்கள்"...,
மைதிலி என்னை காதலி படத்தில் வரும் "ஒரு பொன்மானை" போன்ற பாடல்களில் இதுபோன்று எழுதியிருப்பார். நல்லாவே இருக்கும், ஆனால் அதிகம் இலக்கியத்தனம் இருப்பதால் இசையை ரசித்த அளவிற்கு பாடல் வரிகளை எல்லாராலும் நினைவு வைத்துக்கொள்ளமுடியவில்லை.

டி.ஆரின் நல்ல இசையையும், பாடல்களையும் எல்லாரும் மறந்துவிட்டார்கள் அவர் சொன்ன டண்டனக்கா மட்டும் இன்றும் அழியாமல் இருக்கிறது. பொட்டுப் பொடிசுகள் கூட இதைசொல்லி அவரை கிண்டல் பண்ணுகிறது. ஏய் டண்டனக்கா...

வேற எங்கேயோப்போயிட்டேன்...ரைட்டு... சமீபத்தில் வந்தப்படங்களில் கூட இதுபோன்ற பெண்ணின் அழகை வர்ணிக்கும் பாடல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒருசிலப் பாடல்கள்...
வாடி வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்துமாட்டிக்கிட்ட.. அடா ...அடா..அடா கவிஞர் வார்த்தைகளைப்போட்டு விளையாண்டுருக்காரு, இன்னொரு கவிஞரு சொல்றாரு... கண்ணு அழகுகண்ணு காதலிக்க ஏத்தப்பொண்ணு சென்னை ரயிலுக்குள்ள சிக்கிகிட்ட ஊட்டி பன்னு... ஆஹா.. பொண்ணு...பன்னு..என்ன ஒரு அடுக்குமொழி..பிரமாதம்... இன்னொரு கவிஞரு என்ன சொல்றாருன்னா மாங்கா...மாங்கா... இந்தப்பாட்டை பார்க்குற ஐந்தாம்கிளாஸ் பையன் கூட கவிஞரு என்ன சொல்ல வர்றாருங்குற கப்புனு புடிச்சிக்கிறான்...அங்கதான் நிக்கிறாரு கவிஞரு...

அடச்சே... இந்த எழவுக்குத்தான் இப்ப வர்ற நிறையபாடல்களை கேட்குறதே கிடையாது. மெல்லிசை மன்னரே நீர் வாழ்க... கவியரசரே உம்புகழ் ஓங்குக...

Friday, December 11, 2009

நான் ரசித்த ஒரு தமிழ்படம் - நெஞ்சில் ஓர் ஆலயம்

தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீதரின் இயக்கத்தில் 1962- ஆம் ஆண்டு வந்த படம். இந்தப்படம் வந்து 18 வருடங்கள் கழித்து பிறந்தவன் நான். இன்றும் இந்தப்படத்தை ரசித்து பார்ப்பதுண்டு(கணினியில் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்).

ஒரு சாதாரண முக்கோண காதல் கதைதான். இந்தப்படத்திற்கு பிறகு வந்த பல முக்கோண, சதுர, செவ்வக காதல் படங்களில் இந்தப்படத்தின் பாதிப்பு இருந்தால் அதை தவறாக நினைக்கமுடியாது.

உயிருக்கு உயிராக ஒருவரையொருவர் காதலிக்கும் காதலர்கள். சமய சந்தர்ப்பத்தால் காதலி வேறொருவரை திருமணம் செய்ய நேரிடுகிறது. அந்தப்பெண்ணின் கணவருக்கு புற்றுநோய் என்று ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வர அவருக்கு சிகிச்சை அளிப்பது இன்னும் திருமணம் செய்துகொள்ளாத முன்னால் காதலன். இந்த மூன்று பாத்திரங்களை வைத்தே முழுக்க முழுக்க திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முன்னாள் காதலன், மரணவாசலில் கணவன், இளம்மனைவி இவர்கள் மூவரும் ஒரே இடத்தில் இருக்க இவர்களின் உணர்வுளை மையமாக வைத்து ஒருகதை.



படத்தின் சுவாரஸ்யத்திற்காக நாகேஷ், மனோரமா, குட்டிபத்மினி போன்ற பாத்திரங்களைத்தவிர தேவையற்ற பாத்திரம் என்றும் எதுவும் இல்லாமல், கிட்டத்தட்ட முழுப்படமும் ஒரு ஆஸ்பத்திரியின் பின்னணியில் செட்டுபோட்டு எடுக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் முழுப்படத்தின் எந்த இடத்திலும் ஒரு தொய்வு இல்லாமல் படமாக்கப்பட்டிருப்பது இயக்குனரின் திறமை.

தேவிகா மிக பிரமாதமாக நடித்திருப்பார். முன்னால் காதலன் ஒருபக்கம் கட்டிய கணவன் மறுபக்கம்... பழைய காதல் தன் கணவருக்கு தெரிந்துவிடுமோ என்று குற்ற உணர்ச்சியில் மருகுவது என பிரமாதப்படுத்தியிருப்பார். அழகும், நடிப்பும் ஒருசேர இருந்த தேவிகாவுக்கு இதில் ஒன்று கூட இல்லாமல் ஒரு வாரிசு இருப்பது அதிசயம்தான்.

தன் மனைவிக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கிறான் என்றும் தெரிந்ததும் தனது மரணத்திற்கு பிறகு அவனுடன் சேர்த்துவைக்க துடிக்கும் கணவன் பாத்திரத்தில் முத்துராமன். இயக்குனர் தனது முற்போக்கு சிந்தனையை இந்தப்பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார். மனைவியின் பழைய காதலை தெரிந்தபின்னும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் கனக்கச்சிதமாக நடித்திருப்பார் முத்துராமன். முத்துராமனின் வாரிசு கூட ஆரம்பபத்துல நல்லாத்தான் பண்ணிட்டிருந்தாரு இடைலதான் கொஞசம் லூஸாயிடுச்சு...

கல்யாணகுமார், பாத்திரத்துக்கு சரியான தேர்வு. இவர் சும்மா பேசினாலே ஏதோ பினான்ஸ் கம்பெனில டெப்பாசிட்டை பறிகொடுத்தா மாதிரி குரலில் சோகம் இருக்கும். அந்தமாதிரி சோகமான கதாபாத்திரத்தையே நடிக்க கொடுத்தால்.... நல்லாத்தான் பண்ணிருப்பாரு ஆனா..சில இடங்கள்ல ஓவர் ஆக்டிங் தெரியும். ஆனாலும் ஓகே. இந்தப்படத்தைவிட இவர் நடிச்ச நெஞசம் மறப்பதில்லை படத்தில் மிகப்பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சுசீலாவின் முத்தான முத்தல்லவோ, சொன்னது நீதானா. பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. பிபிஎஸ் குரலில் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்... ஏ.எல்.ராகவன் குரலில் எங்கிருந்தாலும் வாழ்க... இந்தப்பாடலில் மழைபெய்யும் இரவில் தவளைகள் கத்துவது,சில்வண்டுபோன்ற சிலவித்தியாசமான சத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் எம்.எஸ்.வி.சார் நீங்க ஒரு லிஜன்ட். படம் வந்த காலகட்டத்தை இதில் கவனிக்க வேண்டும்.

ஸ்ரீதர் போன்ற முத்திரைபதித்த இயக்குனர்களால்தான் இதுபோன்ற படங்களை கொடுக்கமுடியும். இதன் பிறகு வந்த காதல் படங்கள் இந்தபடம் அளவுக்கு தாக்கத்தை கொடுத்திருகிறதா என்பது சந்தேகம்தான். இந்தப்படம் இந்தியிலும் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் வெளிவந்தது.

என்னது காந்தி செத்துப்போனாரா? இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சானெல்லாம் கேட்டு கலாய்க்கப்படாது நல்லப்படங்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.விமர்சிக்கலாம் ரசிப்புத்தன்மைதான் முக்கியம் காலகட்டம் ஒருவிசயமே அல்ல.

துபாயில் மழை...

அப்பாடா...துபாயில் ரொம்ப நாளா எதிர்பார்த்த மழை இப்பத்தான் ஆரம்பிச்சுருக்கு... ரெண்டு நாளா முன்னாடி ராத்திரி தூறல்போட்டுச்சு இன்னிக்கு காலையிலிருந்து மப்பும் மந்தாரமுமா சும்மா வசந்தகாலம் வந்திருக்கிறது. ஒரு ரெண்டு மாசம்தான் இந்த நிலை அதுக்கப்புறம் திரும்புவும் 50 டிகிரியை தாங்கவேண்டியதுதான்.

வாய்க்கு ருசியா சாப்பிட்டு எத்தனை நாளாச்சு அப்படின்னு சொல்றமாதிரி கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு மழையைப்பார்த்து எத்தனை நாளாச்சு. போனவருடம் மழை அடி தூள்கிளப்பிடிச்சு. இந்த வருஷம் எப்படின்னு தெரில. மழை அடிச்சுபெய்தாலே பிரச்சனையும் கூடவே வந்துருது. நம்மூர் மாதிரி இடங்களேல்லேயே மழை அடிச்சு பெய்தா தண்ணீர் வடிய இடமில்லாம தேங்கி நிற்கிறது.




இங்க கட்டிடங்களுக்கு நடுவே ஏதோ கொஞசம் ரோடு இருப்பதால் மழை அடிச்சு பெய்தா அவ்வளவுதான். போன வருஷம் அடிச்சு பெய்த மழைல நான் வேலைபார்க்கும் ஜபைல்அலி என்ற இடத்திற்கு போகவே முடில. அந்தஅளவிற்கு சாலைகளில் வெள்ளம்.
அவுட்டிங் போக அருமையான காலநிலை. ஆனா டைம்தான் செட்டாகமாட்டேங்குது.

அமீரகத்தின் மற்ற சமஸ்தானங்களான ரஸ்அல்கைமா,அல்அய்ன்,புஸைரா போன்று இடங்களில் அடிக்கடி இதுபோன்ற குளிரும், மழையும் இருப்பதுண்டு. காரணம் மலைப்பிரதேசமாக இருப்பதால். குறைந்த மழை,அதிகவெயில் இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது துபாய், அபுதாபி,ஷார்ஜா மக்கள்தான்.

இப்போது அமிரகத்தின் பல பகுதிகளில் மரங்களை வளர்க்கவேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பெரிய கம்பெனிககளுக்கு பச்சை வளாகம்(GREEN ZONE) கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றும் அரசின் உத்தரவு உள்ளதாக கேள்விப்பட்டேன். இங்க உள்ள மண்ணுக்கு ஈச்சமரம்தான் லாயக்கு. இருந்தாலும் மண்ணை செயற்கையாக வளப்படுத்தி மரங்களையும், தாவரங்களையும் வளர்க்கிறார்கள். இதற்காக நிறைய செலவும் செய்கிறார்கள்.



இதை நம்மூரு அரசியல்வியாதிகளிடம் சொன்னால் பல் இருக்குறவன் பக்கோடா திங்கறான்னு சொல்லுவாய்ங்க இல்லன்னா நம்ம தளபதி மாதிரி இதையே ஒரு சாக்கா வச்சு ஒரு அமீரக ட்ரிப் அடிச்சுட்டு இந்த மாதிரி தமிழநாட்டுலயும் பண்ணப்போறேன்னு ஒரு காரணத்தைச்சொல்லுவாய்ங்க. நமக்கு இயற்கையே கொடுத்த மண்வளமும், நீர்வளமும் இருக்கும் போது மரத்தை வளர்க்குதுல நம்மூர்ல என்னய்யா பிரச்சினை.?

மரம் வளர்ப்போம் நீர்வளம் காப்போம்.

மோர் பாட்டி - பால்ய நினைவுகள்

"ஏம்மா மோர் வேணுமாம்மா...", நான் சிறுவயதில் பள்ளிக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருக்கும்போது வீட்டின் வாசலில் கேட்கும் குரல். சரியாக காலை எட்டுமணிக்கு வந்துவிடுவார் அந்த மோர் விற்கும் பாட்டி. வயது ஐம்பதுக்குமேல் இருக்கும். குள்ளமாக குண்டாக இருப்பார், பல் எடுப்பாக இருக்கும்.பேசுவதும் சரியாக விளங்காது.

மூன்று வானரங்களும்(ரெண்டு அண்ணன்கள்,நான் கடைசி) செய்யும் சேட்டைகளை சமாளித்து, மூன்றுபேரையும் தயார் செய்து பள்ளிக்கு அனுப்ப அம்மா போராடிக்கொண்டிருக்க அப்போதுதான் வருவார் மோர் விற்கும் பாட்டி. மோர் பாட்டியின் சத்தம் கேட்டதும் "பாத்திரத்தை எடுத்துட்டுப்போய் மோரை வாங்கு" என்ற அம்மா சொன்னால் அண்ணன்கள் என்னைத்தான் அனுப்புவார்கள். கடைசி என்பதாலோ என்னவோ நான் எப்பவும் அண்ணன்களுக்கு எடுபிடிதான்.

பாத்திரத்தை எடுத்துட்டு வாசலுக்கு ஓடுவேன், "பள்ளிக்கோடத்துக்கு போகலயா கண்ணு" அப்படின்னு கேட்டுகிட்டே கரண்டியால் மோர்குடத்தை ஒரு கலக்கி கலக்கி பாத்திர்த்தில் ஊற்றுவார். அவர் செய்வதை கண் இமைக்காமல் நான்கவனிப்பதுண்டு. பைசா வாங்க மாட்டார் அன்றைய கணக்கை வாசலில் ஒர் சுவர் ஓரத்தில் தான் வைத்திருக்கும் குட்டைப்பென்சிலால் எழுதிவிட்டு சென்றுவிடுவார்.



ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக வந்துடுவார். வானரங்களுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அம்மா நிதானமாக மோரை தானே சென்றுவாங்கி அந்த பாட்டியுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது நானும் அம்மாவின் அருகில் சென்று அவர்கள் பேசுவதை கேட்பேன். மோர் பாட்டியின் பல் எடுப்பாக இருந்ததால் அவர் பேசுவது சரியாக எனக்கு விளங்காது. ஆனால் அம்மாவுக்கு மட்டும் எப்படி புரிகிறது என்றுதெரியாது.(பெண்ணை பெண்ணால்தான் புரிந்து கொள்ள முடியுமோ..) அந்தவாரம் வாங்கிய மோருக்கு காசும் ஞாயிற்றுகிழமைதான் பைசல் செய்யப்படும்.

"புள்ளைங்களுக்கு இன்னிக்கு லீவாம்மா"... என்று மோர் பாட்டிகேட்டால் அம்மா சொல்லுவார் "மூணும் என்னா பாடுபடுத்துதுங்க, மூணும் பொண்ணா பொறந்திருந்தா நிம்மதியா இருந்திருக்குமென்று.., அதற்கு மோர் பாட்டி சொல்லுவார் "சின்னப்புள்ளைங்கன்னா அப்படித்தான் இருக்கும்..." அந்தப்பாட்டியின் பேச்சில் எப்போதும் ஒருகருணை இருக்கும். மோர் பாட்டி போனவுடன் அம்மா சொல்லுவார் பாவம் இந்த வயசுலயும் ஊர்ஊராக சென்று மோர் விற்கிறார் என்றும், கணவனை இழந்த அந்தப்பாட்டிக்கு ரெண்டு பையன்கள் இரண்டு பேரும் மனைவி பேச்சைக்கேட்டு தனியாகப்போய் தன் அம்மாவை கவனிப்பதில்லை என்றும் மகன்கள் கவனிக்காததால் தன்னிடம் இருந்த பசுவைவைத்து மோர் வியாபாரம் செய்து பிழைப்பதாகவும் என் அம்மா சொல்லக் கேட்டதுண்டு.

தலையிலிருந்து மோர்குடம் உள்ள கூடையை இறக்கிவைத்துவிட்டு எங்கள் வீட்டுவெளித்திண்ணையில் ஆசுவாசமாக அமர்வார். மோரை தந்துவிட்டு கூடையை தலையில் தூக்கி வைக்க யாரையாவது கூப்பிடுவார். நான் ஒருதடவை அதைசெய்ய வந்துபோது தடுத்துவிட்டார், நீ சின்னபுள்ள கண்ணு உன்னால முடியாது என்று... இத்தனை கருணை உள்ள தாயை மனைவிகள் பேச்சைக்கேட்டு அந்த மகன்களால் எப்படி தனியாக தவிக்க விடமுடிந்தது.

பெற்ற பிள்ளைகள் கவனிக்காவிட்டாலும் அந்த தள்ளாத வயதிலும் உழைத்து வாழவேண்டும் என்ற எண்ணம் அந்த பாட்டிக்கு இருந்தது இப்போது உள்ள பல இளைஞர்களிடம் கூட இல்லையே...இப்படி பலகேள்விகள் எனக்குள் வந்ததுண்டு.

இது 17-18 வருடங்களுக்கு முன்னால் நடந்தவை. இப்போது அந்தமோர் பாட்டி என்ன ஆனார் என்றுகூட தெரியாது. நாங்கள் இப்போது வீடு மாறினாலும், சில சமயங்கள் அந்த பழையவீடு இருக்கும் பகுதிக்குச்சென்றால் என்னையறியாமல் அந்த மோர் பாட்டி மோர் விற்ற கணக்கை பென்சிலால் எழுதிவைக்கும் சுவரை பார்க்க என் கண்கள் அனிச்சையாகப்போவதுண்டு. சுண்ணாம்பு மேல் சுண்ணாம்பு அடித்து அந்தசுவர் வெறுமையாகவே இருக்கிறது, மோர் விற்கும் பாட்டி இப்போது அங்கு வருவதில்லை என்பதை அந்த வெறுமையால் உணரமுடிகிறது.

இதுபோல் இன்னொருவரைப்பற்றி அடுத்தப்பதிவில்...

Wednesday, December 9, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - தொடர் பதிவு

உலகத்துலேயே கொடுமையான விசயம் நம்மைப்பத்தி நாமளே எழுதி அடுத்தவங்களை படிக்கவைக்கிறது. நல்ல விசயம், நம்மள பத்தி மற்றவங்க எழுதி படிக்கவைக்கிறது, அது எனக்கு இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு தெரியும்.

சகோ.ஹூசைனம்மாவை கலாய்த்த ஒரே ஒரு சின்ன குற்றத்துக்காக கிடைத்த பெரிய தண்டனை வரலாறு முக்கியம் தொடர் பதிவை எழுதச்சொன்னது. அதனால் முதலில் சொன்ன கொடுமையை செய்கிறேன்.



சின்ன வசயசுலேயே படிப்பதில் ரொம்ப ஆர்வம் கிடையாது, ரொம்ப ரொம்ப ஆர்வம். சிறுவர்மலர்,பூந்தளிர்,அம்புலிமாமா, மஞ்சரி இதில் தொடங்கிய புத்தக ஆர்வம் ஆ.வி.,குமுதம், வழியாக இப்போது இணையத்தமிழ் வரை வந்திருக்கிறது. என் வயதையொத்த பையன்கள் கிரிக்கெட், கடலைப் போடுதல் என்றிருக்க நான் அரசு நூலகமே பழியாக கிடந்ததுண்டு. அதனால்தான் நான் இன்னும் நல்லவனா இருக்கேன்.(சரி..சரி..எல்லாரும் சிரிக்கிறாயங்கல்ல... மேல சொல்லு....)

பூனாவிலிருந்த போது வாரம் ஒருமுறை இணையத்திற்காக வெளியே சென்றவன் சென்னைக்கு வேலை கிடைத்து வந்ததும்(2005), அலுவலகத்தில் பொட்டியையும் கொடுத்து முழுநேர இணையத்தையும் கொடுத்துட்டாய்ங்க. முழுநேரமும் இணையத்தில் இருந்ததுபோக இடையிடேயே கிடைக்கும் ப்ரீ டைமில் வேலைகூட செய்தேன். இதுக்கு மாசாமாசம் சம்பளம் வேற கரெக்டா கொடுத்தாய்ங்க. !!

2007- ஆர்குட் நாகர்கோவில் குழுமத்தில் மா.சிவகுமார் சாரின் அறிமுகம்.(சாருக்கு நம்மூர்தான்). மொக்கை பதிவுகளைப்போட்டு பி.ப. என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் உண்மையிலேயே ஒரு பிரபலபதிவர், மூத்தப்பதிவர். தமிழ்மணத்தை மதிக்கும் பதிவர்கள் இருக்க தமிழ்மணமே மதிக்கும் பதிவர். நான் முதன் முதலில் திறந்து பார்த்த வலைப்பூ.
சிவகுமார் சார் இப்பல்லாம் அதிகமா எழுதறதில்லை. (பின்ன நானெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டா.....)

எழுதி தமிழை வளர்க்கனும்னு ஆசையெல்லாம் கிடையாது. நண்பர் பூங்குன்றன் சொன்னமாதிரி நாமெல்லாம் எழுதாமல் இருந்தாலே தமிழை வளர்த்த மாதிரிதான. இருந்தாலும் ஒரு நப்பாசையில் சிவகுமார் சார் வழிகாட்டுதலில் அந்த சரித்திர புகழ்பெற்ற நாள் வந்தது. ஆம் நானும் வலைப்பூ தொடங்கினேன் 2007,பிப். எழுதினேன் எழுதினேன் மொக்கைப்பசி தீரும்வரை எழுதினேன்.

அண்ணன் உண்மைதமிழன், அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு ஏற்பட்ட நிலை ஒரு பத்து மாதங்களுக்கு முன் இரண்டு வருடங்களாக எழுதி வந்த என்னுடைய வலைப்பூவுக்கும் வந்தது. (இதுல கண்டிப்பா அமெரிக்காவின் சூழ்ச்சி இருக்கிறது). ஆனா ஒண்ணு மட்டும் புரியல, உண்மைதமிழன், அப்துல்லா இவர்களின் வலைப்பூக்களை ஆட்டையைப்போட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. போட்டி, பொறாமைன்னு ஏதோ ஒண்ணு... ஆனா என்னோட வலைப்பூவ எதுக்கு ஆட்டையப்போட்டாய்ங்கன்னுதான் இன்னும் புரில.



இரண்டுவருடங்களாக எழுதிவந்த வலைப்பூபோய்டுச்சே... இனிமே எழுதக்கூடாது என்றிருந்தவனை உசுப்பிவிட்டார்கள் சிலர். ஆரம்பித்தேன்..எழுதினேன்.. எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நான் என்ன எழுதினாலும் அதற்கு பின்னூட்டம் போட்டு ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும், நான் உலகத்தரத்தில் பதிவு போட்டாலும் மரண மொக்கை என்று கலாயக்கும் நோக்குடன் பின்னூட்டம் போடும் ஹுசைனம்மாவிற்கும், பதிவுலகத்தில் இல்லாமல் வெளியிலிருந்து ஆரம்பித்திலிருந்தே ஆதரவளிக்கும் எனது ஆரம்ப கால ரசிகையும், எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக இன்னும் எனக்காக ரசிகர் மன்றம் ஆரம்பிக்காமல் இருக்கும் எனது திவீரமான (மின்)விசிறி திருமதி. ஷீலா ஜானுக்கும் இதன் மூலம் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, சாதனைப் படைக்கும் பல மொக்கைப்பதிவுகளை போட ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தொடர் பதிவு எழுதக்கூப்பிட்டாலே ஏதோ அசிங்கத்தை மிதிச்சாமாதிரி எல்லாரும் முகத்தை சுளிக்கிறாய்ங்க... அதனால் யார்முகத்தையும் சுளிக்கவைக்க விருப்பமில்லை....நல்லாருங்க மக்கா...

Sunday, December 6, 2009

"வடை போச்சே..." - குட்டிக்கதை

"டேய் அவன் வசமா மாட்டிக்கிட்டான், இவனை இன்னிக்கு சும்மா விடக்கூடாது. எத்தனை நாளா பாடாபடுத்திட்டுடிருக்கான். ஓழுங்கா சாப்பிட விடறதில்லை தூங்க விடறதில்லை... இவனைப்புடிக்க மீசைக்காரனை வச்சுகிட்டாலும் அவனுக்கே டிமிக்கி கொடுத்துட்டாம்ல..."

"இவனை என்னப்பண்ணலாம், போட்டுரலாமா.."?

"வேணாம் எங்கேயாச்சும் கண்கணாத இடத்து வுட்டுட்டு வந்தரலாம். வேற எங்கயாச்சம்போய் பொழைச்சுகிட்டும்..."

"அவனைப் பாருடா மாட்டிகிட்டதும் என்னமா சத்தம்போடுறான்....வாயைமூடுடா..
எல்லா அந்த விக்னேசு கொடுத்த இடம்..."

"ஆமா விக்னேசை நினைச்சாதான் இவனை ஒண்ணும் பண்ணாம விட்டுரலாம்னு தோணுது"

"விக்னேசும் மட்டும் என்ன சாதாரண ஆளா? எங்கப்போனலும் அவனுக்குத்தான் முதல்ல திங்கனும்..."



"சரி விக்னேசை கொடுத்த செல்லத்துக்கு இவன் என்னப்பண்ணுவான்? அவனை இப்படியே விட்டா நமக்கு கொடுத்த தொல்லை மத்தவங்களுக்கும் கொடுப்பான்... தூக்குல போட்டுரலாம்? இல்லைன்னா தண்ணில மூழ்கடிச்சி கொன்னுடலாம்.... நம்மள பாடா படுத்துனதுக்கு அவன் அனுஅனுவா சாகறதை பார்த்து ரசிக்கனும்..."

"அவன் பண்ண தொந்தரவு எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன்டா போன வாரம் வாங்கிட்டு வந்த புதுச்சட்டை என்னப்பண்ணான்னு பார்த்தியா? அவனுக்கு புடிக்கலைன்னா இப்படி நானே போட முடியாத படி பண்ணனுமா? படுபாவி

"என்னடா என்ன நடக்குது இங்க..."

"அப்பா அவனை புடிச்சுட்டோம்பா...?"

"ஆமாடா ரொம்ப அட்டகாசம் பண்ணுறான்... இன்னிக்காவது புடிச்சீங்களே... யாராது பார்க்க முன்னாடி கதையை முடிச்சிருங்க..."

"சரிப்பா... டேய் நீ அந்தப்பக்கம் புடி... அழுத்திப்புடி....விட்டுறாதே...டேய்...டேய்...புடி..புடி.புடிடா.. சே...தப்பிச்சுட்டானே... வடை போச்சே...சரி இன்னொரு வடையை எடுத்துட்டுவா... வடையை உள்ளே வச்சு எலிப்பொறியை பரண்மேல வச்சுடு...எங்கப்போயிடப்போறான்... இங்கத்தானே வரனும்.."

Saturday, December 5, 2009

MIRRORS(2008) Vs ஈரம் - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...

இப்பல்லாம் எந்த ஆங்கிலப்படம் பார்த்தாலும் ஏதாச்சும் ஒரு தமிழ்படம் ஞாபகத்துக்கு வந்து தொலைச்சுடுது. எனக்கு மட்டுதான் இப்படியா? டாக்டர்கிட்ட போனா சினிமாபோபியா மாதிரி ஏதாச்சு போபியா இருக்குனு சொல்லிருவாரான்னு பயம்.

போனவாரம் MIRRORS(2008) படம் பார்த்தேன். திகில் படம். வழக்கம்போல பேய் என்ன செய்யும் பழிவாங்கும், அதே கதைதான். இதைத்தான் மைடியர் லிசா காலத்துலேருந்தே பார்த்துட்டு இருக்கோமே....



படத்துல என்ன ஸ்பெஷாலிட்டின்னா பேய் தனக்கான ஊடகமாக பயன்படுத்துவது கண்ணாடியை. கண்ணாடி பிம்பம் வழியாக பேய் தன்னை வெளிப்படுத்தி பழிவாங்குகிறது. கிராபிக்ஸ் வேலை நல்லாத்தான் இருந்தது. இதுமாதிரி வேற ஏதோ ஒரு படம் பார்த்திருக்கோமேனு திடீர்னு ஏதோ பொறி தட்ட, தமிழ்ல வெளியான ஈரம் படம் நினைவுக்கு வந்தது. அட ஆமால்ல...

ஈரம் படத்தில் இறந்துப்போன பெண்ணின் ஆத்மா பழிவாங்குகிறது. அதற்கு தனக்கான ஊடகமாக பயன்படுத்துவது தண்ணீரை. சரி நம்ம இயக்குனருக்கும் வெள்ளைக்காரன் மாதிரி ஐடியா தோணிருக்கும், படைப்பாளிகள் ஒரே மாதிரி யோசிப்பது ஒண்ணும் புதுசில்லையேன்னு மனசை தேத்திக்கிட்டு படத்தை தொடர்ந்து பார்த்தால் தொடர்ந்து வந்த பல காட்சிகள் ஈரம் படத்தை திரும்ப திரும்ப கண்முன் கொண்டு வந்தது.

அப்படியே உருவியிருந்தால் ரிவிட்டு அடிப்பாயங்கன்னு நினைச்சு கான்செப்டை மட்டும் உருவி கண்ணாடிக்குப்பதிலா தண்ணீரை போட்டாரோ என்னவோ?

இது என்னடைய அனுமானம் மட்டுமே...உண்மை என்னவென்று ஈரம் பட இயக்குனர் அறிவழகனுக்கே வெளிச்சம். நல்லாருங்க மக்கா...

Friday, December 4, 2009

வாலி படமும், கம்பராமாயணமும்...

சில ஆங்கிலப்படங்களைப் பார்க்கும்போது இந்தமாதிரி வேறு ஏதோ படத்துல வருமேன்னு நினைச்சா அது அனேகமா நம்ம தமிழ் படமாத்தான் இருக்கும். பார்க்கும் ஆங்கிலப்படமும் தமிழ்படத்திற்கு சிலவருடங்கள் முன்பு வந்ததாகத்தான் இருக்கும்.

இதில் சிலபடங்களை ஆங்கிலத்திலிருந்து அப்படியே உருவியிருப்பார்கள் நம்ம
ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி. சிலபேர் சில விசயங்கள் மட்டும் உருவியிருப்பார்கள் நம்ம செல்வராகவன் மாதிரி.

சில இயக்குனர்கள் இன்னும் பெரிய தில்லாலங்கடியா இருப்பார்கள். அதாவது நம்ம மணிரத்னம் மாதிரி. புராணங்களில் வரும் ஒரு அவுட்லைனை வைத்து ஒரு படத்தையே எடுத்துவிடும் திறமைசாலிகள். உதாரணம் தளபதி.

உடனே எஸ்.ஏ.சூர்யா கூட வாலி படம் பண்ணாரேன்னு சொல்லலாம்.
ராமாயணத்தில் வாலி தன் தம்பி சுக்ரீவனின் மனைவி தாராவை அடைய நினைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் வாலி தன் தம்பி சுக்ரீவன் மேல் கொண்ட தவறான கோபம். அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்படி கிடைக்கும் என்ற குணம் கொண்டவன் தன் தம்பி சுக்ரீவன் என்ற தவறான நினைப்பினால் சுக்ரீவன் மீது எற்பட்ட வெறுப்பு.



அண்ணன் தன்மேல் கொண்ட கோபத்தால் நல்லவன் சுக்ரீவன் உயிருக்கு பயந்து ஊரை விட்டே ஒடி ராமனிடம் தஞசம் புகுகிறான். அதனால் வாலியின் கோபம் சுக்ரீவன் மனைவி தாராவின் மேல் திரும்புகிறது. அப்போதும் அவளை கோபத்தில் சிறையில்தான் வைத்து துன்புறுத்தினானே தவிர அவளை எந்தவிதத்திலும் பலாத்காரம் கூட செய்யவில்லை.

கோபம் கண்ணை மறைக்கும் என்று சொல்லும் கம்பர் உண்மையில் வாலி ஒரு ஜென்டில்மேன், மிகசிறந்த வீரன் அப்படின்னு கம்பராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட வாலியை ஒரு அயோக்கியன் கதாபாத்திரத்தினை சுட்டிக்காட்டும் விதமாக படத்திற்கு பெயர் வைத்தது மிகப்பெரிய தவறு.



ராமாயணத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை, மிகச்சிறந்த வீரனை ஒரு பெண்பித்தனாக சித்தரித்துபோல் இருந்தது வாலி படம். எது எதற்கோ பிரச்னையை உண்டாக்கும் சிலபேர், சில அமைப்புகளுக்கு இது போன்ற சிலவிசயங்கள் மட்டும் கண்ணில்படாமல் போய்விடுகிறது. காரணம் யாருக்கும் புராணங்கள் தெரியவில்லை மற்றொன்று சிம்ரன், "நிலவைக்கொண்டுவா கட்டிலில் கட்டிவை..." இது ஒன்றுபோதும் உலகத்தை மறப்பதற்கு... புராணத்தை மட்டும் நினைவு வைத்துக்கொள்வார்களா என்ன?

இவ்வளவு நேரம் கத்துனதுக்கப்புறமும்... "அது யாருங்க வாலி...? இந்த எம்ஜீஆர்-படத்துக்கெல்லாம் பாட்டு எழுதுவாரே இப்ப கூட எழுதிட்டுருக்காரே அந்த வாலியைப்பத்திதானே சொல்லுறீங்க அப்படீன்னு மட்டும் கேட்டுடாதீங்க..."
அழுதுடுவேன்...

"குஜால்" விளம்பரத்தால் வந்த தலைவலி - அட்றா சக்கை...அட்றா சக்கை...

"நம்ம நாத்தமருந்து(BODY SPRAY) விளம்பரத்துக்கு நல்ல ஐடியா ஒண்ணு கொடுங்க சார்",

"ஐடியா தானே கொடுத்துடுவோம், ஒரு பையன் ஒரு பொண்ணுக்காக ஹோட்டல்ல வெயிட்டிங். அந்தப்பொண்ணு ஹோட்டலுக்கு வர்றாங்க, ஹோட்டலுக்கு உள்ள வரும்போது எதுத்துாப்புல வர்ற ஒரு சர்வரை அசிங்கமா பின்னாடி ஒரு தட்டு தட்டுறாங்க ..."

"ஏன் சார் அந்தப்பொண்ணு என்ன லூசா?"...

"வெளங்கிடும்... அந்த சர்வரு நம்ம பாடி ஸ்ப்ரே போட்டுருக்கான் சார்..."

"ஆஹா..ரொம்ப டாப்பு..."

"வேணும்னா இன்னொன்னு சொல்றேன்.. பாடி ஸ்ப்ரே தயாரிப்புல சாக்லெட் மணத்தை சேர்த்துருங்க அதை உடம்புல அடிச்சுட்டு போறவனை இளம்பெண்கள் கண்ட இடத்துல கடிக்கிறாங்க... இது எப்பூடி..." ?

"சூப்பர்..."நம்ம பிராண்டு மார்க்கெட்டுல சும்மா பிச்சு உதறப்போகுது போங்க"...

சொல்லும்போதே நெளிய வைக்குதே... இது மாதிரி வேற வேற ஐடியாக்களில் விளம்பரங்கள் ஒரே நாத்தமருந்துக்காக வந்துகொண்டிருக்கிறது. அது இந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்ட்டெின்(HUL) ஆக்ஸ் என்ற உடம்பில் போடும் நாத்த மருந்து.



இது போன்ற குஜால் ஐடியா விளம்பரங்கள் இப்போது அந்த நிறுவனத்திற்கு புதிய தலைவலியை உண்டு பண்ணியிருக்கிறது. டில்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பேடி என்பவர் இந்த நாத்த மருந்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது செம காமெடி.

ஏழு வருடங்களாக ஆக்ஸ் என்ற நாத்தமருந்தினை பயன்படுத்தி வந்திருக்கிறாராம். இந்த மருந்தின் எல்லாவகைகளையும் பயன்படுத்தியும் இதுவரை ஒரு மொக்கை பிகரும் சிங்கிள் டீ குடிக்க கூட இவருடன் சென்றதில்லையாம். முயற்சியின் உச்சக்கட்டமாக வீட்டில் தன் வேலைபார்க்கும் வேலைக்கார பெண்ணிடம் இந்த நாத்த மருந்தை உடம்பில் போட்டுவிட்டு மன்மதைகலையை காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். அந்தப்பெண் துடைப்பை கட்டையாலேயே நம்ம ஹீரோவை அடித்திருக்கிறார்.

இதனால் வெறுத்துப்போனவர் அந்த விளம்பரம் என் மனதைக்கெடுத்துவிட்டது. எல்லாமே டுபாக்கூர் என்று கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்.

பேடியின் வழக்கறிஞர் தெரிவிக்கும்போது, எனது கட்சிக்காரர் அந்த பெர்ப்யூம் குறிப்பிட்டுள்ள எல்லா வழிமுறைகளையும் பின்பற்றியே அதனை பயன்படுத்தியிருக்கிறார். இந்த வழக்குக்கு அந்த நிறுவனம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று. யுனிலிவர் நிறுவனம் இந்தவழக்கு விசயமாக இதுவரை எந்தகருத்தும் தெரிவிக்கவில்லை.



சினிமாவிற்கு இருப்பதுபோல் விளம்பரங்களுக்கும் தணிக்கை குழு இருக்கிறதா? இதற்கென்று விதிமுறைகள் இருக்கிறதா? ஆபத்தான விளையாட்டுக்களை விளம்பரமாக காண்பித்து இது எக்ஸ்பர்ட்களை கொண்டு எடுக்கப்பட்டது, வீட்டில் இதை முயற்சிக்கவேண்டாம் என்று ஒரு ஒரத்தில் சிறிய எழுத்துக்களில் 20 நொடிகள் விளம்பரத்தில் 3 நொடிகள் மட்டும் காண்பித்துவிட்டால் போதுமா...?

இதைவிட கொடுமை வங்கிகளின் மியுச்சுவல் பன்ட் விளம்பரத்தில் DISCLAIMER போடுவதுதான். 10 வரி எச்சரிக்கை செய்தியை 2 நொடிகளில் வாசிப்பதுபோல் வாசித்து விடுகின்றனர். கேட்பவர்களுக்கும் புரியாது, படிக்கவும் முடியாது.ஏதோ கடமைக்காக இதைசெய்வது மட்டும் தெரிகிறது. ரிசர்வ் பேங்க் அப் இந்தியா இதை முறைப்படுத்தி தெளிவாக வாசித்து குறிப்பிட்ட நேரம் அதை காண்பிக்கவேண்டும் என்று உத்தரவை அமுல்படுத்தியது. அதை யாரும் இதுவரை பின்பற்றுவதாக தெரியவில்லை.

பள்ளி மாணவர்கள் இப்போது எடுக்கப்பட்டும் சில சினிமாக்களைப் பார்த்துக்கெட்டு போகிறார்கள் என்று சொன்னாலும் அதைவிட சில விளம்பரங்களைப் பார்த்து அதிகமாக கெட்டுபோகிறார்கள் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

Tuesday, December 1, 2009

பழிவாங்கும் கதைகளும், தமிழ் சினிமாவும்...

கடந்தகால தமிழ் சினிமாக்களை எடுத்துக்கொண்டால் அதிகம் பயன்படுத்தப்பட்ட கதைக்களம் ஒன்ற காதல் கதை, மற்றொன்று பழிவாங்கும் கதை. பழிவாங்கும் கதை என்றுப்பார்த்தால் அப்பனை கொன்றவனை பழிவாங்குவதிலிருந்து தொடங்கி ஒன்று விட்ட சித்தப்பா, பெரியப்பா ஏன் பக்கத்துவீட்டுக்காரனை கொன்றவனை பழிவாங்குதல் என இதற்கு ஒரு அளவே இல்லாமல் படங்கள் வந்துள்ளன.

பழிவாங்கும் கதை என்பது காலங்காலமாக நையப்புடைக்கப்பட்ட கதைக்களம் என்பதால் திரைக்கதையில் புதுமைகளும், வித்தியாசங்களும் வைத்தால் மட்டுமே படம் வெற்றியடையும் என்பதை தெரிந்து கொண்ட சில இயக்குனர்கள் அதே போல சூப்பர் ஹீட் படங்களையும் தந்துள்ளார்கள். அதிலிருந்து சிலப் படங்கள்...


நீயா...

1979ல் இயக்குனர் துரையின் இயக்கத்தில் வந்தப்படம். காதலனை கொன்றவனைப் பழிவாங்கும் காதலி. இதிலென்ன வித்தியாசம்.? இருக்கிறது காதலனும், காதலியும் பாம்புகள். மனித உருவம் எடுக்கும் சக்தியுள்ள பாம்பு ஜோடிகள். ஜோடியாக ஜல்சா பண்ணிக்கொண்டிருக்கும்போது காட்டுக்கு வேட்டையாட வருபவர்கள் காதலனைப் போட்டுதள்ள, கொன்றவர்களை பெண்பாம்பு பழிவாங்குகிறது. பெரிய லாஜீக் பொத்தல் கதை என்றாலும் திரைக்கதை அமைத்தவிதம், கமல், ஸ்ரீப்ரியா நடித்த சூப்பர் ஹீட் திரைப்படம். எப்போது பார்த்தாலும் சலிக்காத படங்களில் ஒன்று.


ஒரு கைதியின் டைரி

தன் குடும்பத்தை அழித்தவனை பழிவாங்கும் கதை. வில்லன்களை வரிசையாக ஒவ்வொரு பேராக கதையை முடிக்கும் திரைக்கதை தமிழ் சினிமாவுக்குப்புதுசு. கமல் ஒத்தையாக வந்தாலே படம் முழுக்க அவர் ஆளுமை தான் இருக்கும்.. இரட்டை வேடம் என்றால் கேட்கவா வேண்டும். இதில் வில்லன்களை கொல்லும் பாணி ஆங்கில சினிமாவிலிருந்து உருவப்பட்டதாகக் கூட சொல்வதுண்டு. கமலின் சூப்பர் ஹீட் சினிமாக்களில் இதற்கு தனி இடம் உண்டு.

அபூர்வ சகோதரர்கள்

வித்தியாசம் என்றாலே கமல் தான் போல. தன் அப்பாவைக்கொன்று குடும்பத்தை அழித்தர்களை பழிவாங்கும் கதை. இதிலென்ன புதுசு? எல்லாமே புதுசுதான். குட்டைக்கமல், சர்க்கஸ் என்று படு விறுவிறுப்பான திரைக்கதை. சர்க்கஸ் பாணியில் வில்லன்களை கொல்வது தமிழ்சினிமாவுக்கப் புதுசு. சர்க்கஸ் பின்னணில் இதற்கு முன் பல படங்கள் வந்திருந்தாலும். சர்க்கஸ் பற்றிய பல விசயங்களை ரசிர்கள் முன்னனால் காண்பித்த சிறப்பு இப்படத்தற்கு உண்டு. சொல்லவா வேணும். சூப்பர் டூப்பர் ஹீட். இப்போது வரவேண்டியப்படம், 20 வருடங்களுக்கு முன்பே கமல் செய்துவிட்டார்.

கஜீனி

காதலியை கொன்றவர்கள் பழிவாங்கும் கதை. ஆங்கிலப்படமான "மெமண்டோ" வின் மறுபதிப்பு. இருந்தாலும் இன்றைய காலத்திற்கேற்ப விறுவிறுப்பான, ரசிக்கும்படியான திரைக்கதையை கொண்டு அமைந்தப்படம். ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் தமிழ்சினிமாவிற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் புதுசு. சூப்பர் டூப்பர் ஹீட்.


மேலே சொன்ன படங்களை தூக்கி சாப்பிடும்படி பழிவாங்கும் கதைக்கொண்ட இரண்டுப்படங்கள் சமீபத்தில் வந்தன. திரைக்கதையில் அப்படி ஒரு புதுமை,வித்தியாசம்.. இத்யாதி... இத்யாதிகள்... இரண்டுப்படங்களில் முதல் படம் திரைக்கதைக்காக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு மயிரிழையில் கிடைக்காமல் போனது... இரண்டாவதுப்படம் கதைக்காக பரிந்துரைக்கப்பட்டு நூலிழையில் ஆஸ்கர் கிடைக்காமல் போனது.

அது என்னென்னப்படம்னு தெரியுதுங்களா??

கீழேப்போங்க...

டட்டட டடட்டயங்.....................................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


பில்டப்பு பலமாருக்கேன்னு யோயிக்கிறீங்களா... ஏன்னா படமும் அந்தமாதிரிதான்...

சும்மாவா...பின்ன...ரெண்டுப்படமும்...சும்மா டெரருல்ல...
.
.
.
.
.
.

.
.
.
.
.
..
.
.
.




... கொஞ்சம் ஓரமாத்தான் துப்புறது... மேலப்படுதுல்ல....

FEEDJIT Live Traffic Feed